Sunday, October 19, 2025

காலத்தால் அழியாத கானம்: "காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்"


இப்பாடலைக் கேட்கும்போது பேராசிரியர் நுஃமான் அவர்கள் ஒருமுறை தமிழில் வெளியான மிகச்சிறந்த காதற் பாடலென பாரதியாரின் இப்பாடலைக் கூறியிருந்ததும் நினைவுக்கு வருகின்றது.
 
 
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
 
படம்: கப்பலோட்டிய தமிழன்
பாடல் வரிகள்: மகாகவி பாரதியார்
இசை: ஜி.ராமநாதன்
பாடகர்கள்: பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா
நடிப்பு: ஜெமினி கணேசன், சாவித்திரி

Saturday, October 18, 2025

எழுத்தாளர் மற்றும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தமிழினியை நினைவு கூர்வோம்!




 ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18.  அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன். 

பெண் போராளியான தமிழினியை யாருமே, அவருடன் இணைந்து போராடியவர்கள் உட்பட , அவர் மதிப்பு வைத்திருந்த எழுத்தாளர்கள் உட்பட , எவருமே நினைவு கூர்வதில்லை. எழுத்தாளர் ஒருவர் மட்டும் புகழ்பெற்ற தமிழகச் சஞ்சிகையொன்றில் அவரை மிகவும் கீழ்த்தரமாகச் சித்திரித்து புனைகதை எழுதியிருந்தார். இது துரதிருஷ்ட்டமானது.
 
ஆனால் தமிழினி அவரது எழுத்துகளூடு நினைவு கூரப்படுவார். அவரது எழுத்துகள் நிலையானவை. அவரது எழுத்துகள் அவருடன் போராடி மறைந்த வீராங்கனைகளை நினைவு கூர்பவை. அவர் ஈடுபட்ட போராட்ட வரலாற்றை நினைவு கூர்பவை. காலத்தின் கட்டாயமான சுயவிமர்சனத்தைச் செய்பவை அவரது எழுத்துகள். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கவை. சுயவிமர்சனமில்லாமல் மானுட இருப்பு ஒருபோதுமே முன்னேற்றம் அடைவதில்லை. வரலாற்றுப் பாதையில் கடந்த காலம் பற்றிய சுய விமர்சனங்களே மானுடரை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்பவை. அவ்வகையில் வரலாற்றுப்பங்களிப்பைச் செய்பவை. வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை.
இப்பதிவு நானறிந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான தமிழினியை நினைவு கூர்பவை.

தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.
தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

Friday, October 17, 2025

தமிழ்ச் சொற் புணர்ச்சிக் குழப்பம் பற்றி , பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுடன் ஓர் உரையாடல்! ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]


அண்மையில் நூல் பற்றிய விமர்சனமொன்றில் பாவிக்கப்பட்டிருந்த 'கூற்றை' என்னும் சொல் பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி பின்வருமாறு தன் எதிர்வினையில் பதிவு செய்திருந்தார் "மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம்." என்று.


அதற்கு நான் "கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை." என்று எதிர்வினையாற்றியிருந்தேன்.

அதற்குப் பதிலளித்த ஶ்ரீரஞ்சனி "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. 'இதேபோல் கூறு வரின் 'கூறு' என்பது 'கூற்றை' அல்லது 'கூறை' என வருவது சரிதான். ஆனால் 'கூறு' என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் 'கூற்றை' என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

Wednesday, October 15, 2025

தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG


அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'.  அவரது 'மாயக்குதிரை' தொகுப்பிலுள்ள  இறுதிச் சிறுகதை. இந்தக் கதை ஏன் என்னை மிகவும் கவர்ந்திருந்தது? அதற்கான காரணங்களைக்  கூறுவதற்கு முன் கதை பற்றிய சுருக்கம்.  

கதை இதுதான். கதை சொல்லி  'டொரோண்டோ', கனடாவில்  வாழும் தமிழ்ப்பெண்.  தாயைப்பார்ப்பதற்காக ஊருக்குச் செல்லும் பெண். ஃபிராங்க்பேட் அல்லது இலண்டன் வழியாகச் செல்வதற்கு டிக்கற் கிடைக்காததால் , சூரிச் வழியாகச் செல்லும் பயணி. சூரிச்சில்  டிரான்சிட்டில் எயார் லங்கா விமானத்துக்காகக் காத்து நிற்கின்றாள். அப்போதுதான் அங்குள்ள விமான நிலைய அதிகாரியொருவர் மொழிதெரியாத ஒரு மூதாட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைக்  காண்கின்றாள்.  அவ்வதிகாரி பல் மொழிகளில் அம்மூதாட்டியை அவளது கடவுச்சீட்டை, போர்டிங் பாஸைக்  கேட்டுக் கேள்விகள் கேட்டுக  களைத்துப் போயிருந்தார். அம்மூதாட்டியோ அவரது கேள்விகளுக்கெல்லாம்  'ஊருக்குப் போறன்' என்று பதிலிறுத்துக் கொண்டிருந்தார்.

கதை சொல்லியான கனடாப் பெண்ணுக்கு அம்மூதாட்டி தமிழ்ப்பெண் என்பது தெரியும். உதவியிருக்கலாம். ஆனால் உதவவில்லை. பிரயாணக்களைப்பு, உறக்கமின்மை, கவலை, பொறுப்பேற்றலின் மீதான பின்வாங்கல் போன்ற காரணங்களில் ஏதாவதொன்றுடன் அங்கு தமிழ்ச் சாயல் கொண்ட  இன்னுமோர் இளம் பெண் இருந்ததும் காரணமாகவிருக்கலாம்  கதை சொல்லியே தன் நிலைக்கான காரணத்தை இவ்விதம் சுய விமர்சனம் செய்கின்றாள்.

Tuesday, October 14, 2025

தொல்லியல் அறிஞர் , அமரர் நடன காசிநாதன் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


 

தொல்லியல் அறிவ்ஞர் நடன காசிநாதன் 6 அக்டோபர் 202 அன்று  மறைந்தார். இவரது மறைவுச் செய்தியைத் தாமதமாகவே அறிந்தேன். இவரது மறைவு இத்துறைக்குப் பேரிழப்பு. இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஸ்நேகா பதிப்பக வெளியீடாகத்  தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. அப்போது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலினை வெளியிட்டு வைத்தவர் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன். அதனைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள். இவரது மறைவால்  துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஸ்நேகா பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. 

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....


எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது. 

ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது  அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம். 

[டிஜிட்டல் ஓவியத் தொழில்  நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

Monday, October 13, 2025

போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)


அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல்  ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார். 

போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....


அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத்  தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:

" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன.  அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "

காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "


"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் 
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும் 
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -

'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது.  நடிகர் எஸ்.வி.சுப்பையாவின்  தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ்.  பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன்.  இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ,  தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,  சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.

இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த  திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர்  விஜயன். 

காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார்.  ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது. 

https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1

டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

Sunday, October 12, 2025

உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! 

இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால்  இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து  அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது.  பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது  வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம்.  ]

இதன் விளைவே முக்கியமான சிங்கள  ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.

Saturday, October 11, 2025

நினைவில் நிற்கும் காட்சி: தருமியாக திருவிளையாடலில் நடிகர் நாகேஷ்!


நடிகர் நாகேஷைப் பற்றி நினைத்தால் அவர் நடித்த திரைப்படக் காட்சிகள் பல நினைவுக்கு வரும்.அவற்றில் பலருக்கு முதலில் நினைவுக்கு வரும் காட்சி திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி - சிவன் காட்சிதான்.

மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.

இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.

இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?

அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.

அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.

https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA

டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG

கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில் , சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பு' !


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG 

'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!

கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத்  திரைப்பட விழாவில்  (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன்  எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, October 10, 2025

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

 
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG 

பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் விருதினைப் பெற்றுத்தந்த பாடல். இசை - எம்.எஸ்.வி. ]


பாடலின் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப் பாடல் வரிகளிலில் அடங்கும். இப்பாடலைக்கேட்கையியெல்லாம் இவ்வரிகளைக் கவிஞர் மிகவும் இலகுவாக, அனுபவித்து எழுதியிருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. கவிஞருக்கு மானுட வாழ்க்கை பற்றிய பாடல்கள் கை வந்த கலை. வாழ்க்கை அனுபவத்தின் சாரத்தினைப் பிழிந்து எடுத்து வைத்த வரிகள்.

வாணி ஜெயராமை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல்களில் முதன்மையானது. அவ்வளவு இலகுவாகப் பாட முடியாத பாடலைச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார்.

நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தாலும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் , என்னைப்பொறுத்த வரையில் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ இராகங்கள்' தான். பாடகி பைரவியாகவே மாறியிருப்பார். உண்மையில் ஶ்ரீவித்யா தன் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி போல் சிறந்த பாடகியாக வந்திருக்க வேண்டியவர். நடிப்பில் கவனத்தைத்திருப்பியதால் அதனைத் தவற விட்டதாகவே உணர்கின்றேன்.

Thursday, October 9, 2025

காலத்தால் அழியாத 'செம்மீன்' மலையாளப்படப் பாடலொன்று!



எழுத்தாளர் தகழி சிவசங்கரம்பிள்ளையின் புகழ் பெற்ற மலையாள நாவல்களிலொன்று 'செம்மீன்'. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் , காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. 
 
இதன் திரைவடிவம் அதே பெயரில் வெளியாகிப் புகழ் பெற்றது. ராமு காரியாத்தின் இயக்கத்தில் வெளியாகி, இந்திய மத்திய அரசின் சிறந்த பட விருதுடன், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்ற திரைப்படம்.
 
சத்யன் (பழனி) , மது (பரீக்குட்டி) & ஷீலா (கருத்தம்மா) நடிப்பில் வெளியான திரைப்படம் , பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை,. வயலார் ராமவர்மா எழுதியுள்ளார். 
 
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர் பாடகர் மன்னா டே (Manna Dey).
 
* 'டிஜிட்டல்' தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG
 

Tuesday, October 7, 2025

'ராஜா ராணி'யில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,கலைஞரின் வசனமும்!


'ராஜா ராணி' நடிகர் திலகமும்,கலைஞரும் இணைந்த திரைப்படம். அதில் வரும் கலைஞரின் வசனங்கள் திரைவானில் மிகுந்த புகழ் பெற்றவை.


அத்திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் கலைஞரின் வசனங்களை இக்காணொளியில் கேட்டு மகிழுங்கள்.

'டிஜிட்டல் ' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG

https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

காலத்தால் அழியாத கானம்: 'மன்னிக்க வேண்டுகிறேன்.உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்'



 

படம் - இரு மலர்கள்
பாடல வரிகள் - கவிஞர் வாலி
இசை - எம்.எஸ்.வி
பாடகர்கள் - டி..எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - நடிகர் திலகம் & நாட்டியப் பேரொளி
பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=gkYcPC6CZv8&list=RDgkYcPC6CZv8&start_radio=1

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG



நடிகர் மம்முட்டியின் மீள்வருகை! வாழ்த்துகள்!


என் அபிமான நடிகர்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி சிறிது காலம் உடல் நிலை காரணமாக ஒது ங்கியிருந்து மீண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அதே உற்சாகத்துடன் அவர் திரைவானில் சிறகடித்துப் பறக்க வாழ்த்துகள். 
 
அவரை வேற்கும் அதே சமயம் எனக்குப் பிடித்த அவரது படப் பாடல்களிலொன்றினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
 
'கார்னிவல்' திரைப்படத்தில் , ஷியாமின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைப் பாடியிருப்பவர் உன்னி மேனன். பாடல் வரிகள் - சிபு சக்கரவர்த்தி. இப்பாடல் காட்சியில் மம்முட்டியுடன் நடித்திருப்பவர் பார்வதி.
 
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி ; VNG
 

Monday, October 6, 2025

காலத்தால் அழியாத கானம்: 'எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்'



 

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -

இடையிலொரு காலத்தால் அழியாத கானமொன்றைக் கேட்கும் நேரம்: 'முகராசி'யில் , திரையிசைத்  திலகம் கே.வி.எம்மின் இசையில், டி.எம்.எஸ்ஸின் குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கவிஞர் கண்ணதாசனின் மொழியில் ஒலிக்கும் பாடல். அறுபதுகளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் இதுவுமொன்று.

பாடலைக் கேட்க https://www.youtube.com/watch?v=FQy9u9hekT8

காலத்தால் அழியாத கானம் - ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன். நீ ஒரு தனிப்பிறவி.


 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -

என் பால்ய பருவத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் ஒன்று. கவிஞர் கண்ணதாசனுக்கு உரிய எளிய,ஆனால் நெஞ்சைக்கொள்ளை கொள்ளும் மொழி, கே.வி.எம்மின் இசை, அபிமான நடிகர்களின் உற்சாகமும், துடிப்பும் மிக்க நடிப்பு, அதை அப்படியே குரலில் பிரதிபலிக்கும் பாடகர்கள் டி.எம்.எஸ் & பி,சுசீலாவின் குரலினிமை இவையெல்லாம் இப்பாடல் என் நெஞ்சில் அழியாமல் நிலைத்து நின்று விட்டதற்கான காரணங்கள்.

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=rx1SzJsq9tU

காலத்தால் அழியாத கானம் ; 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது'


விவசாயி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களிலொன்று. கவிஞர் உ டுமலை நாராயணகவியின் வரிகளும், திரையிசைத்திலகத்தின் இசையும், டி.எம்.எஸ் & பி;சுசீலாவின் குரலினிமையும், எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயாவின் நடன அசைவுகளும், நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

என் பால்ய வயதில் வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த படங்களிலொன்று தேவரின் 'விவசாயி'.

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=uAI_apwFvrg

Sunday, October 5, 2025

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதின் பெயர் மாற்றம் - 'அ,முத்துலிங்கம் இயல் விருது'!


நேற்று நடந்த இயல்விருது 2024 நிகழ்வில் ஒரு முக்கியமான அறிவிப்பினை ஆரம்பத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் விடுத்திருந்தார். அது இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது , அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படும்.


இன்னுமொரு விடயமும் முக்கியமானது. அதனைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் பிரதானமானவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் மூலம் அறிந்தேன். அவர் தான் இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டச் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். இயல்விருது மேல் தமிழக இலக்கிய ஆளுமையாளர்கள் பலருக்கும் ஆர்வம் இருப்பதற்குரிய காரணங்களில் முக்கியமானது அதன் பின்னால் இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஈடுபாடும், பங்களிப்பும்.

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது நிகழ்வில்..


நேற்று நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட இயல்விருது 2024 நிகழ்வில்  இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது  பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் எடுத்த புகைப்படம்.

இடமிருந்து  வலமாக: எழுத்தாளர்  நான் , டானியல் ஜீவா, யுவன் சந்திரசேகர் 

 

 மேலும் சில புகைப்படங்கள்..

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்


இம்முறை கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கவிஞராகி அறிமுகமாகி நாவலாசிரியராக உருமாறியவர்.  இவரது கானல்நதி, வெளியேற்றம்,  குள்ளச்சித்தன் சரித்திரம் ,பயணக்கதை , மணல் கேணி ஆகிய நாவல்கள் முக்கியமானவை.  வித்தியாசமான கதை சொல்லலில் நகர்பவை. அவரது தேடல் மிக்க நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.அவரது ஏதாவதொரு நாவலொன்றினை வாசித்தால்,ஏனைய் நாவல்களையும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துபவை. 

யுவன் சந்திரசேகரின் நாவல்கள் பற்றிய் அறிமுகத்தை தமிழ் விக்கியில் வெளியான எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றிய அறிமுகக் குறிப்பு தருகின்றது.  அக்குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Wednesday, October 1, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து மூன்றாம் வயதில் பாரதி' பற்றி..- வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.-


பகுதி ஒன்று

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

காலத்தால் அழியாத கானம்: 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?'

 

கவிஞர் வாலியின் வரிகளில், எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் ஒலிகும் இந்தப் பாடல் என் பால்ய பருவத்துடன் பின்னிப் பிணைந்ததொன்று. அப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் , ஏதோவொரு நிகழ்வில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல். எம்ஜிஆர் படப் பாடல்களுக்கு உரிய சுறுசுறுப்பு, எளிய இனிய வரிகள், உற்சாகம், மகிழ்ச்சி, வேகம் , இன்குரலினிமை , தொய்வற்ற இன் மெல்லிசை, நிறைந்த பாடல்.
 
அப்போது எம்ஜிஆர் திமுகவுக்காக இயங்கிக்கொண்டிருந்தார். பாடலில் எவ்வளவு இலாகவமாகக் கவிஞர் வாலி சூரியன், தமிழ் போன்ற சொற்களைக் கையாண்டிருக்கின்றார்!
 
இன்னுமொரு விடயத்திலும் இப்பாடல் நினைவில் நிலைத்து நின்று விட்டதற்குக் காரணம் - அப்பா பழைய காலத்து ஆள். பாகவதர், பி.யு.சின்னப்பா அவரது சுப்பர் ஸ்டார்கள், ஆனால் சிவாஜியை அவருக்கும், அம்மாவுக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள 'சந்திரோதயம்' படம் பிடித்திருந்தது. அதில் இடம் பெற்றிருக்கும் 'காசிக்குப் போகும் சந்நியாசி', கவிஞர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாடல்களுடன், பத்திரிகையாளராக அமைந்திருந்த எம்ஜிஆரின் வேடமும் முக்கிய காரணங்கள்.
 
* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG

தமிழ் இலக்கிய உலகில் எஸ்.பொ'வை அறியாதவர் எவர் உளர்?


இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் உருவான இலக்கியப் போக்குகள் மூன்று: முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் & பிரபஞ்ச யதார்த்தவாதம்.  இம்மூன்று இலக்கியப் போக்குகளுமே இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறுகள். 

அக்காலகட்டத்தில் இவற்றின் அடிப்படையில் தர்க்கங்கள் பல நிகழ்ந்தன. அவ்விதமானதொரு போக்கு அதன் பின் தொடரவில்லையென்பது துரதிருஷ்ட்டமானது.

இம்மூன்று பிரிவுகளிலும் தடம் பதித்த ஆளுமைகள் பலர். இப்போக்குகளின் முன்னோடிகள், முன்னோடிகளைப் பின்பற்றிய இலக்கிய ஆளுமைகள் , இவர்களின் படைப்புகள், அவை பற்றி நிகழ்ந்த தர்க்கங்கள் இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை. இவை பற்றிய விரிவான போதிய ஆய்வுகள் இதுவரை வெளியாகவில்லையென்பதும் கவனிக்கத்தக்கது.

Tuesday, September 30, 2025

என் முகநூற் பதிவொன்று: மறக்க முடியாத பெண்கள் கல்லூரி அதிபர்!



 இவரை என்னால் மறக்க முடியாது. என் எழுத்துலக வாழ்க்கையில் இவருக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு. நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து என் எழுத்துகளை அவதானித்து வந்தவர். என் அம்மாவின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருவராகவிருந்தவர். அம்மா யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் மறக்காமல் சென்று சந்திக்கும் அவரது சிநேகிதிகள் சிலரில் ஒருவர்.

நான் எழுதிய முதலாவது சிறுகதை நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான 'சலனங்கள்'. அதிலிருந்து இவர் என் வாசகர்களில் ஒருவராகவே இருந்திருக்கின்றார். இவருக்கு எப்படி நான் அவரது சிநேகிதியின் மகன் என்பது தெரிந்திருக்கும்? அம்மா அவரைச் சந்திக்கையில் கூறியிருந்திருக்க வேண்டும்.

காலத்தால் அழியாத கானம் - "மெல்லப் போ! மெல்லப் போ!'


 * டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வி.என்.ஜி (VNG)
 
 படம் - காவல்காரன்
பாடல் வரி - கவிஞர் வாலி
இசை - எம்.எஸ்.வி
பாடகர்கள் - டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - எம்ஜிஆர் & ஜெயலலிதா

Saturday, September 27, 2025

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -


  *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி


இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், அவரது பன்முகத்திறமை காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவருமான எழுத்தாளர் 'அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்' என்றொரு மெய்நிகர் வழியான நிகழ்வு மூலம் சிறப்பானதொரு நினைவு கூரலை நடாத்தியிருக்கிறது 'பைந்தமிழ்ச்சாரல்' அமைப்பு.  உடகவியலாளர்கள் ராஜ் குலராஜின் நெறிப்படுத்தலில், பவானி சற்குணச்செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்வின் முக்கியமான அம்சம் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் அ.ந.கந்தசாமி பற்றிய நீண்ட , விரிவான, முக்கியமான, ஆவணச்சிறப்பு மிக்க உரை. 

திரு. மு.நித்தியானந்தன் அவர்கள் அ.ந.க அவர்களைப் பதுளை ஊவாப் பாடசாலையில் மாணவனாக இருந்த சமயம் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர். அது பற்றிய தன் நினைவுகளை தனதுரையில் பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான தகவல்கள் அவை. அ.ந.க அவர்களின் நாவல்கள், நாடகம், சிறுகதை, கவிதை  எனப் பல விடயங்களை உள்ளடக்கிய் அவரது உரை அவரது அ.ந.க.வின் படைப்புகள் மீதான வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தின. உரை எழுத்து வடிவில் பதிவு செய்ய வேண்டியதொன்று. பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி வைப்பாரென்று நம்புகின்றேன். நிச்சயம் பதிவுகளில் ஏனைய அ.ந.கந்தசாமியின் படைப்புகளுடன் அதுவும் ஆவணப்படுத்தப்படும்.

Friday, September 26, 2025

அ.ந.கந்தசாமி (1924 - 2024) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -

 
 
* அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி 
 
அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'
 
இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
 
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
 
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967)  பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம்.
 

- அ.ந.கந்தசாமி -
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.

நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாருடன்...


எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமார் தொண்ணூறுகளில் கனடா வந்திருந்தார் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத்தொழில் நுட்பத்தின் மூலம் விளையாடிப் பார்த்தேன். அதன் விளைவு இது .

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ..


அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது சந்தித்தேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத் தொழில் நுட்பம் 'ஸ்கெட்ச்' வடிவில் மாற்றித்தந்தது.

எழுத்தாளர் மாலனுடன் ...


தொண்ணூறுகளில் எழுத்தாளர் மாலன் கனடா வந்திருந்தபோது அவரை எழுத்தாளர் ரதனுடன் சந்தித்தேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத் தொழில் நுட்பத்தின் மூலம் உருமாற்றி விளையாடியதன் விளைவு இது.
 
இடமிருந்து வலமாக - ரதனின் நண்பர், ரதன், மாலன் & நான்.

Thursday, September 25, 2025

Wednesday, September 24, 2025

எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!


இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
அவரது நாவல்களான 'பருவம்' (மகாபாரதத்தின் மீதான மறுவாசிப்பு) , ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 

ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
 
அவரது மறைவினையொட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சலிக்குறிப்பு சுருக்கமாக அவரது இலக்கியப் பங்களிப்பினை எடுத்துரைக்கின்றது. - https://www.jeyamohan.in/223213/
அவரது நினைவாக இவ்விணைப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது!

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

எழுத்தாளர் நடேசனின் பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் பயணத்தொடர்



 - குதிரைகளில் நடேசனும், நண்பரும் -

பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம். 
 
இங்குள்ள புகைப்படம் பயணத்தில் அவரும், நண்பரும் குதிரைகளில் பயணிப்பதை வெளிக்காட்டும். நான் முதலில் அவற்றைக் கழுதைகள் என்று நினைத்து விட்டேன். போர் புரியப் பாவித்த தம்மை இப்படிக் கழுதைகளைப் போல் மானுடர் பொதி சுமக்கவும், பயணிகளைச் சுமக்க வைத்து வீட்டார்களே என்று குதிரைகளின் உளவியலும் கழுதைகளைப் போல் மாறி விட்டன போலும்!
 
இப்புகைப்படத்தில் கழுதைகளில் இருக்கும் மானுடர் இருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் தன்னிச்சையானவை. என்னை மிகவும் இப்புகைப்படம் கவரக் காரணமானவை. 
 
இப்புகைப்படத்தில் காணப்படும் குதிரைகள் இரண்டும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், மானுடர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெளிவாகக் காண முடிகின்றது. அவை 180 பாகை வித்தியாசத்தில் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. பாவம், குதிரைகளுக்குத் தெரியாது தம்மேல் இருப்பவர்களில் ஒருவர் இதுவரை மிருக வைத்தியராகவிருந்து ஓய்வு பெற்றவர் என்னும் விடயம். தெரிந்திருந்தால் 'இது முறையோ? இது தகுமோ?" என்று நடேசனிடம் அவை முறையிட்டிருக்கும்.
 
நடேசனின் பயணத்தொடர்கள் சுருக்கமான விபரிப்புகளுடன் கூடிய சுவையான பயணத்தொடர்கள். நான் விரும்பி வாசிப்பவை. அப்பகுதிகளுக்கு நானே சென்ற உணர்வைத்தருபவை. 
 
**************************************************************************** 
பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் (1) - நடேசன். -
 
2025 சித்திரை 22, புதன்கிழமை
மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.

Tuesday, September 23, 2025

தமிழக அரசியல் ஒரு பார்வை!


எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]     தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந...

பிரபலமான பதிவுகள்