கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் & நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள் இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம்.
ஜெயலலிதாவின் நர்த்தனச் சிறப்பையும், அதற்கு ஈடு கொடுக்கும் எம்ஜிஆரின் துள்ளல் நடிப்பையும் , துள்ளல் இசையையும் , வளை என்னும் சொல்லை வைத்து எம்மை வளைத்துப் பிடிக்கும் கவியரசரின் இலாகவத்தையும், அவவ்ரிகளில் வெளிப்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடகர்களும் கேட்பதில் இன்று வரை எனக்குச் சலிக்கவில்லை. இன்னுமொன்று - வசீகரம் மிக்க நடிகர்கள் இருவரின் வசீகரத்தை வெளிப்படுத்துவதிலும் பாடல் வெற்றி பெற்றுள்ளது. [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா ]
படம் -புதிய பூமி
இசை - எம்.எஸ்.வி
பாடல் வரிகள் - கவிஞர் கண்ணதாசன்
குரல் - டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - எம்ஜிஆர் & ஜெயலலிதா
ஆண்;
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண்;
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
கேட்பதற்கு இனிமையான
ஆண்;
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
பெண்;
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
ஆண்;
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
கேட்பதற்கு இனிமையான
பெண்:
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கும்
ஆண்>
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்மை கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ
பெண்;
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண்:
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு

No comments:
Post a Comment