Friday, June 28, 2024
கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர் Kinga Surma திடீரென ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -
நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.
நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.கனல் உமிழும்
கட்டடக்காட்டின்
குளிர் தென்றல் நீ.
எத்தனை வருடங்கள் எம்முடன்
பின்னிப் பிணைந்திருந்தாய்.
எம் பால்ய பருவத்து நினைவுகளில்,
பதின்ம வயது நினைவுகளில்,
இளமைப்பருவத்து நினைவுகளில்,
நடுத்தர வயது நினைவுகளில்,
முதுமைப் பருவத்து நினைவுகளில்
நீ இருக்கிறாய்.
நீ அப்பருவங்களில் எம்முடன் பயணித்தாய்.
உன்னை எம்மிடமிருந்து
எவ்வித முன்னறிவித்தலுமின்றிப்
பிரித்தது எது?
அரசியலா? அல்லது
தவறானதோர் தொழில்நுட்ப
அறிக்கையா?
எது எப்படியிருந்தபோதும்
அது மன்னிக்க முடியாதது.
உனக்கு நாங்கள் பிரியாவிடை கூறவில்லை.
அது மன்னிக்க முடியாதது.
உன்னை நாங்கள் இறுதியாகப் பார்த்து]
முத்தம் கொடுக்கவில்லை.
அது மன்னிக்க முடியாதது.
உன்னை மீண்டும் முன்புபோல்
ஆரத்தழுவிட
ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
நீ
மீண்டும் உயிர்த்தெழுவாய்
என்னும் நம்பிக்கையுடன்
காத்திருக்கின்றோம்.
girinav@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment