Sunday, August 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: அதிகாலைக் கனவில் வந்தாய்!



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=PNeexMOQYoM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய் நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

அதை நினைத்தேன் அப்போது. ஆம்.
அது உண்மையாக இருக்கக் கூடும்.
அதனால்தான் நீ அக்கனவில் வந்தாயோ.
அன்பே. நீ அக்கனவில் வந்தாயோ.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

கனவில் உன்னைக் கண்டது
நனவிலும் தொடர்கிறது அன்பே.
நினைவில் நிறைந்தாய் அன்பே
நீக்கமற என்பேன் அன்பே.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

மானுட வாழ்வில் அன்பே
மறக்க முடியாத அனுபவம் காதல்.
உறக்கமின்றித் தவிக்க வைக்கும்.
உள்ளவரை உளத்தை வாட்டி வைக்கும்.
கனவில் வந்தாய் அன்பே
காதல் உணர்வு தந்தாய்
நினைவில் நிறைந்தாய் அன்பே
நீக்கமற என்பேன் அன்பே

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்


No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...