Monday, September 30, 2024

வ.ந..கிரிதரன் பாடல்: சிந்திப்போம்!



இசை &  குரல்: AI SUNO | ஓவியம்: AI

சிந்திப்போம்!

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

இருப்பு இருக்கும் அண்டம் பற்றி
விருப்புடன் சிந்திப்பேன் சலிப்பு அற்று.
சிந்திப்பது போலோர் இன்பம் உண்டோ!
செகத்தில் சிந்திப்பது தான் பேரின்பம்.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

சிந்திப்போம் இங்குநாம் உள்ள வரையில்.
சிந்திப்பதால் தெளிவு பிறக்கும் மேலும்
சிந்திப்பதால் அறிவு பெருகும் எனவே
சிந்திப்போம் இருக்கும் வரையில் நாமே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...