Saturday, September 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!



இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

நல்ல நாள்!

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

நடந்தவற்றை ஒதுக்கிக் கடப்போம்.
நடப்பவற்றை துதித்து ஏற்போம்.
நடப்பவை எல்லாமே இனிதாய்
நடக்கும் என்பதை அறிவோம்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

புலரும் காலை புத்துணர்வால்
பொங்கி வழியட்டும். சிறக்கட்டும்.
நம்பிக்கை எண்ணமழை பெய்யட்டும்.
நாள் நன்னாளாகக் கழியட்டும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

No comments:

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!

அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துக...