Monday, September 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்.


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

கணந்தோறும் பிறப்போம்!

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள்  கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

இருப்பும் இங்கு சார்பே உணர்வோம்.
இங்குஎம் இருப்பும் இதுபோல் துளியே,
இதற்குள் கூடிப்பெருகி கும்மாளம் அடிப்போம்.
இதைநாம் புரிந்துவிடின் இன்பமே நிலைக்கும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

காலத்தூடு விரையும் இருப்பில் கணந்தோறும்
கலங்கள் பிறக்கும். நாமும் பிறப்போம்.
கணந்தோறும் பிறக்கும் இருப்பை அறிவோம்.
களிப்பில் பொழுதை நிறைத்துத் தொடர்வோம்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...