Friday, March 19, 2021

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary) - Witty Garden -

சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத்தில் பல்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னூல்களாகப் பல படைப்புகளுள்ளன. எனது படைப்புகள் பலவற்றை வாசகர்கள் தாமாகவே இனங்கண்டு அவற்றைப்பற்றி எழுதியுள்ளார்கள். பல்கலைகழகங்களில் ஆய்வுகள் செய்துள்ளார்கள். தற்போதும் மாணவியொருத்தர் முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வுகள் செய்து வருகின்றார். எழுத்தாளர்கள், கலை,இலக்கிய விமர்சகர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் என என்னுடன் தொடர்பு கொண்ட பலரும் இணையத்தில் வெளியான எனது படைப்புகள் வாயிலாக என்னை அறிந்து தொடர்பு கொண்டவர்கள்தாம். நான் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால்.. இன்னும் எழுத்தாளர்கள் பலர் இணையத்தின் ஆரோக்கியமான பயன்பாட்டினை அறியாமல் , அவற்றைப்பாவிக்காமல் இருக்கின்றார்கள் என்பதனால்தான். மேலும் அவர்கள் தம் படைப்புகளை வெளிப்படுத்துவதற்குக் கலை,இலக்கிய ஆளுமைகளின் அங்கீகாரத்தை எண்ணிச் செயற்படுவதுதான். உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உங்கள் படைப்புகளை இணையத்தில் வலைப்பதிவுகளில், இணைய இதழ்களில் பதிவேற்றுங்கள். அவை வாசகர்களை நேரில் சென்றடையும். உங்கள் படைப்புகள் தரமாக இருந்தால் நிச்சயம் இன்றோ அல்லது நாளையோ அல்லது என்றோ நிச்சயம் அது உரிய வாசகர்களைச் சென்றடையும் என்பது மட்டும் நிச்சயமானது. 

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்