வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Friday, May 1, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'
வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே உலகத்தின் இயக்கமாம்.
உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்குவோம்.
உழைப்பவர் உயர்வே உலகத்தின் உயர்வாம்.
உண்மையிது உணர்வோம். செயற் படுவோம்.
மண்ணில் மலர்ச்சியை ஏற்றி வைப்போம்.
உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே உலகத்தின் இயக்கமாம்.
Thursday, April 30, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்'! வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி!
வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் கணியன் பூங்குன்றன்.
கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறைமுக நகரே யாழ்ப்பாணப்பட்டினம்! - வ.ந.கிரிதரன் -
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]
1. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!
யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத் தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
Tuesday, April 28, 2026
அழியாத கோலங்கள்: ஜீவபூமி (ராணிமுத்து) நினைவுகள்!
மானுடரின் வாசிப்பு அனுபவங்கள் பல படிகளைக்கொண்டவை. சிறுவர் இலக்கியம், வெகுசன இலக்கியம் (சரித்திர , சமூக, மர்ம நாவல்கள், காமிக்ஸ்) தீவிர இலக்கியம் எனப் பல படிகளைக்கொண்ட அனுபவங்கள். அவ்வகையில் அனைத்து வகை இலக்கியப் படைப்புகளையும் , அவற்றின் முக்கியத்துவத்தையும் மதிப்பவன் நான்.
Monday, April 27, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே
எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே
Sunday, April 26, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.
சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.
சதுரங்கம் என்பதொரு போர்க்களமே.
அதுபோல் வாழ்வுமொரு போர்க்களமே.
போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கே
பொறுமை மிகவும் அவசியமே.
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
போர்க்களத்தில் பொறுத்தார் வெற்றியடைவார்.
சதுரங்கத்தில் சாதனை படைப்பார்.
எதுவந்தபோதும் எழுந்து வெல்வர்.
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.
Saturday, April 25, 2026
வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
Subscribe to:
Posts (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

