Sunday, September 13, 2026

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்


தகழி சிவசங்கரப் பிள்ளை

எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:

"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."

இதற்கு என் எதிர்வினை இதுதான்:

"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.

செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.

நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."

இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"





Saturday, September 12, 2026

எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!




அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.Crime and Punishment (குற்றமும் தண்டனையும்) - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
2. Resurrection (புத்துயிர்ப்பு) - லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
3. கரமஷாவ் சகோதரர்கள் - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
4. காலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. The Old Man and The Sea (கடலும் கிழவனும்) - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Earnest Hemingway)
7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
8. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
9. நீலகண்ட பறவையைத்  தேடி - அதீன் பந்த்யோபாத்யாய 
10. The Metamorphosis (உருமாற்றம்) - ஃப்ரான்ஸ் காஃப்கா  (Franz Kafka)

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும்.  இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.  

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள். 

Thursday, September 10, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)


எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB 

அமரர் கல்கி நினைவாக...

எழுத்தாளர் கல்கி 

தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.

கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2. 

Sunday, September 6, 2026

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை!

வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 528, 457
பார்த்த பக்கங்கள் - 1, 630, 623
ஹிட்ஸ் (Hits) - 2. 453, 389
Bandwidth - 105 .56 GB

பதிவுகள் இணைய இதழ் - www.pathivukal.com www.geotamil.com www.pathivugal.com


தெளிவாகப் பார்க்க, மேலுள்ள தகவல் படத்தை  ஒரு தடவை அழுத்தவும்.


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -


எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) 

எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய  , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில்  எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார்.  நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்

தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...