வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல்
காத்திருப்பார்கள்.
காத்திருக்கும் காலத்தில்
காலத்தை ஓட்டியது தவிர
வேறென்ன செய்தார்கள்?
விருது பற்றிய அறிவிப்பு
வந்து விட்டால் போதும்
வீரம் மிகுந்து விடும்.
கர்ச்சனை செய்வார்கள்.
பாய்ந்து
கொத்திக் குதறி எடுப்பார்கள்
விருதையும்,
விருது பெற்றவரையும்.
சில சமயங்களில் இவர்கள்
மெளனித்திருப்பார்கள்.
மெளனத்திற்குக் காரணம்
அச்சமயம் இவர்கள்தம்
நட்புக்குரியவர்களுக்கு
விருதுகள் கிடைத்திருக்கும்.
.png)


