Thursday, September 17, 2026

கவிஞர் கந்தவனத்தின் 'ஹைக்கூக் கவிதைகள்' பற்றிய கட்டுரை பற்றி....


கவிஞர் கந்தவனம் அவர்கள்  10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில்  'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். முனைவர் நிர்மலா சுரேஷ் முனைவர் பட்டத்திற்காக , சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 'ஹைக்கூக் கவிதைகள்' என்னும் பொருளில் அளித்த ஆய்வுக்கட்டுரையைத் தழுவி, கட்டுரையின் பெரும்பகுதி  எழுதப்பட்டதாகக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றார் கவிஞர்.)

ஹைக்கூக் கவிதைகள் பற்றிக் கவிஞர் கூறியுள்ள முக்கிய கருத்துகள் வருமாறு:

கவிஞர் கந்தவனம்
"ஹைக்கூ என்பது ஒருவகை யப்பானியக் கவிதை.  யப்பானிய மொழிப் பன்மையில் 'ஹைக்கூ'  'கவிதைகள்' பொருளில் வழங்குகின்றது.  ஒருமையில் அது ஹைக்கூக் கவிஞர்களைக்  குறிக்கும். ஆயின்  சொல்லின் அடிப்பொருளை ஆராயின் 'கருப்போன்றும் உயிரணுப்போன்றும் உருவானதொரு கவிதை' என்னும் பொருள் வெளிப்படுவதைக் காணலாம்.

அளவால் ஹைக்கூ  5 - 7 - 5 அசைகளைக் கொண்ட மூன்று வரிக் கவிதை.  ஆயின் அதன் பொருள் தோண்டத் தோண்டத் தூண்டும் தங்கச் சுரங்கத்தைப் போன்றது... இவ்வித விளக்கப்பாட்டுக்குக் ஹைக்கூக் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ, பூசன் , ஐசா, ஷிகி போன்ற கவிஞர்களுக்குரியது.

இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026


இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு வரும் செப்டம்பர் 19, 20 ஆம் திகதிகளில் மார்க்கம் (கனடா) நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட வாழ்த்துகள். [(https://www.tolkappiyam.ca/ ]

இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026

நாள்: 19, 20 செப்டம்பர், 2026 | இடம்: Bill Hogarth Secondary School, 100 Donald Sim Avenue, Markham, ON L6B 0R4
மாநாட்டிற்கான நோக்கம் - தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல். தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல். இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல். தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல். தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'


வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'
இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'


வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

Wednesday, September 16, 2026

என்னைக்கவர்ந்த எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'! - வ.ந.கிரிதரன் -



என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமான நாவல் எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'.  சி.ஏ.பாலனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் , இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதெமி வெளியிட்ட நாவல்.  எஸ்.கே.பொற்றேகாட்டிற்கு சாகித்திய, ஞானபீட விருதுகளைப் பெற்றுக்கொடுத்த நாவல்.

'ஒரு கிராமத்தின் கதை' நாயகனான சீதரனோ சமூக, பொருளியற் சூழல் காரணமாக நீங்கினான். வடக்கு இந்தியா தொடக்கம் ஐரோப்பா வரையில் அலைந்து திரிந்து முதியவனாக மீண்டும்  தன் கிராமத்துக்கு வருகின்றான். அவன் மீண்டும் ஊர் திரும்பியபோது அவன் கண்ட அவனது கிராமமான 'அதிராணிப்பாடம்' முற்றிலும் மாறிப்போயிருந்தது. அவன் பால்யப் பருவத்து நினைவுகளைத் தாங்கி நின்ற பகுதிகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. அவ்வூரின் உயிர்த்துடிப்பாக விளங்கிய மனிதர்கள், அவன் வாழ்வின் பால்ய, பதின்மப் பருவத்தில் இடம் பெற்றிருந்த மனிதர்கள்  பலரும் காணாமல் போயிருந்தார்கள். அவனது நினைவெல்லாம் நிறைந்திருந்த மண்ணைக் காண அவன் எத்துணை ஆர்வத்துடன் மீண்டும் திரும்பி வந்தான். வந்தபோதுதான் உணர்ந்தான் அவன் நினைவில் நிற்கும் அவனது அதிராணிப்பாடம் அங்கில்லை. அங்கிருந்தது உலகமயமாக்கலின் விளைவாக உருவான கால மாறுதல்களைத்  தாங்கி நிற்கும் அவனுக்கு அந்நியமான அதிராணிப்பாடம். 

Sunday, September 13, 2026

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்


தகழி சிவசங்கரப் பிள்ளை

எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:

"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."

இதற்கு என் எதிர்வினை இதுதான்:

"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.

செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.

நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."

இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"





Saturday, September 12, 2026

எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!




அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.Crime and Punishment (குற்றமும் தண்டனையும்) - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
2. Resurrection (புத்துயிர்ப்பு) - லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
3. கரமஷாவ் சகோதரர்கள் - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
4. காலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. The Old Man and The Sea (கடலும் கிழவனும்) - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Earnest Hemingway)
7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
8. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
9. நீலகண்ட பறவையைத்  தேடி - அதீன் பந்த்யோபாத்யாய 
10. The Metamorphosis (உருமாற்றம்) - ஃப்ரான்ஸ் காஃப்கா  (Franz Kafka)

கவிஞர் கந்தவனத்தின் 'ஹைக்கூக் கவிதைகள்' பற்றிய கட்டுரை பற்றி....

கவிஞர் கந்தவனம் அவர்கள்  10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில்  'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். மு...