கவிஞர் கந்தவனம் அவர்கள் 10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில் 'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். முனைவர் நிர்மலா சுரேஷ் முனைவர் பட்டத்திற்காக , சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 'ஹைக்கூக் கவிதைகள்' என்னும் பொருளில் அளித்த ஆய்வுக்கட்டுரையைத் தழுவி, கட்டுரையின் பெரும்பகுதி எழுதப்பட்டதாகக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றார் கவிஞர்.)
ஹைக்கூக் கவிதைகள் பற்றிக் கவிஞர் கூறியுள்ள முக்கிய கருத்துகள் வருமாறு:
| கவிஞர் கந்தவனம் |
அளவால் ஹைக்கூ 5 - 7 - 5 அசைகளைக் கொண்ட மூன்று வரிக் கவிதை. ஆயின் அதன் பொருள் தோண்டத் தோண்டத் தூண்டும் தங்கச் சுரங்கத்தைப் போன்றது... இவ்வித விளக்கப்பாட்டுக்குக் ஹைக்கூக் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ, பூசன் , ஐசா, ஷிகி போன்ற கவிஞர்களுக்குரியது.



.jpg)
