எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB
Thursday, September 10, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)
எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB
அமரர் கல்கி நினைவாக...
![]() |
| எழுத்தாளர் கல்கி |
தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.
கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2.
Sunday, September 6, 2026
ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!
ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை!
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -
| எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) |
எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார். எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார். நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.
Thursday, September 3, 2026
எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!
இலங்கை அரசால் வழங்கப்படும் அதியுயர் இலக்கிய விருது 'சாகித்திய ரத்னா' . இம்முறை அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான சோ.பத்மநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு பற்றி....
வரலாறு என்பது கடந்த காலக்கண்ணாடி. அது உண்மையை உள்ளவாறு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பதியப்படும் நனவிடை தோய்தல்கள் வரலாறு என்னும் பெயரில் உலா வருகின்றன.
உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக் குறைத்து எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றுப் பதிவுகளே அல்ல, வெறும் நனவிடை தோய்தல்களே. உண்மைகள், ஊகங்கள், அவை பற்றிய உணர்ச்சி மிக்க நனவிடை தோய்தல்களே.
Monday, August 31, 2026
நண்பர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பார்வையில் நான்!
நண்பரும், எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் (ஆஸ்திரேலியா) என் புகைப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக்கி அனுப்பியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.
Subscribe to:
Posts (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)
எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் /...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...



