Wednesday, August 26, 2026

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -


[பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிச் சிறப்பானதொரு திறனாய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார் திறனாய்வாளர் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) . கட்டுரையை முழுமையாக வாசித்தேன். சிறப்பான கட்டுரையைத் தந்ததற்காக மனம் நிறைந்த நன்றி. 

 உண்மையில் இத்தொகுப்பைச் சமகால விமர்சகர் எவரும் என் காலத்தில் சரியாக உள்வாங்கி விமர்சிப்பதற்குச் சாத்தியம் இல்லையென்றே எண்ணியிருந்தேன். யாரோ ஒருவர் எதிர்காலத்தில் இணையத்தில் கண்டெடுத்து விமர்சனத்துக்குள்ளாக்குவார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் காலத்திலேயே ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) என்னும் விமர்சகர் தொகுப்பை இனங்கண்டு திறனாய்வு செய்திருக்கின்றார். என்னைப் பிரமிக்க வைத்த திறனாய்வு. சிறப்பான திறனாய்வைத் தந்ததற்காக மீண்டும் அவருக்கு என் நன்றி. 

 அண்மைக்காலமாகவே பதிவுகளில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவரது திறனாய்வுக் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழமான கட்டுடைப்பைச் செய்பவை. அதற்காக அவர் உள்வாங்கும் உசாத்துணை நூல்கள் , முயற்சி, கடும் உழைப்பு உண்மையில் பாராட்டத்தக்கவை. தமிழ் இலக்கியத்துக்கு அவரது திறனாய்வுகள் வளம் சேர்ப்பவை. வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன்]

- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு!   - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

பொருளடக்கம்

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: கல்விப்புல அறிமுகம்

முன்னுரை: நவீனத் தமிழ் விண்வெளிக் கவிதையியலும் வ.ந. கிரிதரனும்

அத்தியாயம் 1: மீவியற்பியலும் (Metaphysics) குவாண்டம் கவிதையியலும் (Quantum Poetics)

1.1 17-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையியல் பாரம்பரியமும் கிரிதரனின் கவிமொழியும்

1.2 காலவெளி (Spacetime), சார்பியல் மற்றும் ஒளிவேகம்: கவித்துவ உருவகங்கள்

1.3 "காலவெளி மீறிய கவிஞன்": குவாண்டம் நுரையும் நிகழ்காலத்தின் அசாத்தியமும்

அத்தியாயம் 2: இருத்தலியல் (Existentialism) மற்றும் ஒன்டோலாஜிக்கல் (Ontology) தேடல்

2.1 "இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு": இருப்பின் புதிர்

2.2 நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்': காலத்தின் சவாலும் மானுட மனதின் அசையா உறுதியும்

2.3 'பேய்த்தேர்' மற்றும் 'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு': அர்த்தமின்மையின் மத்தியில் அர்த்தம் தேடுதல்

அத்தியாயம் 3: சூழலியல் மரபும் புலம்பெயர் அகக் கனலும் (Ecological Poetics and Diaspora Realities)

3.1 "சொப்பன வாழ்வினில் மயங்கி": நகரமயமாதலும் இயற்கையின் சிதைவும்

3.2 'எழுக அதிமானுடா': நீட்ஷேயின் கோட்பாடும் மார்க்சிய வர்க்கப் போரின் எரிகனலும்

3.3 "துருவத்துக் கட்டடக் காட்டுக்கான்": புலம்பெயர் தேசத்துத் தனிமையும் தாய்மைப் பேரன்பும்

அத்தியாயம் 4: பாரதியியல் தொடர்ச்சியும் கண்ணம்மா என்னும் குவாண்டம் படிமமும் (The Bharathian Legacy & Quantum Kannamma)

4.1 மகாகவி பாரதியின் ஆன்மீகக் கவிதையியலின் நவீன இயற்பியல் நீட்சி

4.2 "நீ அலையா? நீ துகளா?": அலை-துகள் இருமைத்தன்மையும் காதலின் பரிமாணங்களும்

Tuesday, August 25, 2026

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -



வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல் 
காத்திருப்பார்கள். 
காத்திருக்கும் காலத்தில் 
காலத்தை ஓட்டியது தவிர
வேறென்ன செய்தார்கள்?
விருது பற்றிய அறிவிப்பு 
வந்து விட்டால் போதும்
வீரம் மிகுந்து விடும்.
கர்ச்சனை செய்வார்கள்.
பாய்ந்து  
கொத்திக் குதறி எடுப்பார்கள்
விருதையும், 
விருது பெற்றவரையும்.
சில சமயங்களில் இவர்கள் 
மெளனித்திருப்பார்கள்.
மெளனத்திற்குக் காரணம் 
அச்சமயம் இவர்கள்தம்
நட்புக்குரியவர்களுக்கு 
விருதுகள் கிடைத்திருக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம். சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம். சவால்கள் இல்லாத இருப்பும் உண்டோ? சவால்கள் எல்லாம் புதிர்களே எமக்கு. புதிர்களை அவிழ்ப்போம். பெருமிதம் அடைவோம். பெருமிதம் அடைந்தே இருப்பினை வெல்வோம். சூழல்கள் கணமும் சவால்களைத் தருமே. சூழும் சவால்களை எதிர்த்தே நிற்போம். உறுதி மிக்கது தப்பிப் பிழைக்குமாம். உணர்ந்து கொள்வோம். உறுதியை வளர்ப்போம்.

Monday, August 24, 2026

வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?



"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல" - குறள் -

தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம்  மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது.  முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை.  சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.  

ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது.  அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.

செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....


சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:


"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//

இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :

இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

[ பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிச் சிறப்பானதொரு திறனாய்வுக் கட்டுரையினை...