நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புகைப்படம்.
இது கற்சுறா தம்பதியினரின் (கற்சுறா & ஜெபா) 'மற்றது' பதிப்பகம் வெளியிட்ட கலாமோகனின் சிறுகதைகளின் தொகுப்பு -1. எதிர்காலத்தில் ஏனைய தொகுப்புகள் வெளியிடப்பட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். பன்முக, பன்மொழிப்படைப்பாளி (பிரெஞ்சு மொழியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன)
'தாயகம்' (கனடா) வெளியானபோது அதில் கலாமோகன், ஜெயந்தீசன், நேசமித்திரன் என்னும் பெயர்களில் நிறைய பன்முகப்படைப்புகளை (சிறுகதை, கவிதைம், கட்டுரை & மொழிபெயர்ப்பு என) எழுதியவர்.

