எழுநா இதழில் வெளியான கலாநிதி சிவா தியாகராஜாவின் 'யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1' என்னும் கட்டுரையில் நல்லூர் நகர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும். (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107).

