வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
நங்கையிவள் நயனங்கள் நூறு கதை பேசும்.
நறுங்குவளை மனம்வெட்கி ஒளிந்தோட வைக்கும்.
பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
பொங்குச் சுழித்தோடும் பேராற்றின் சிலிர்ப்பு
பூவையிவள் பேரழகில் ஏறிநிற்கும் மதர்ப்பு.
மார்புற நூலணைத்து மண்பார்த்துச் செல்வாள்.
யாரிவளோ என்றே ஆடவர் மனமொடிய வைப்பாள்.
பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
அதிகாலை எழில்பெறவே அழகுநடை பயில்வாள்.
அவள் பின்னே மோகித்து ஆடவரும் செல்வார்.
அவள் முகம் காணாவிடின் மனமொடிந்து கிடப்பார்.
அகக்கண்ணில் அவளுருவம் நிறைந்தே நிலைமறப்பார்.
பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

