Tuesday, March 17, 2026

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!


'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. இந்த விருது இம்முறை கவிஞர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள்.  தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. இதற்கேன் எல்லாரும் துள்ளிக் குதிக்கின்றார்கள்? காரணம் - அவ்விருதுடன் கிடைக்கும் ரூபா பதினொரு இலட்சம்தான்.

கவிஞர் வைரமுத்துவின் தனிப்பட்ட ஆளுமை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டது.  குறிப்பாகப் கலையுலகச் சார்ந்த பெண்கள் அவர் மேல் வைத்துள்ள குற்றச்சாட்டுகள். அவற்றை தேர்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்திருந்தால் கவிஞருக்கு விருது கிடைத்திருக்காது.

எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

Monday, March 16, 2026

பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?'


பாரதியாரின்  'நிற்பதுவே,நடப்பதுவே'  பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன். 

பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?' 


இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்


நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
 
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'


பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'  பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.

பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' 

இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்

நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

(முகநூற் பதிவு) ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் (Jürgen Habermas) முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர்!


அண்மையில் மறைந்த ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்களில் ஒருவர். இவரைப் பற்றி எழுத்தாளர் ப.வி.ஶ்ரீரங்கன் தனது முகநூற் பக்கத்தில் சுருக்கமான குறிப்பொன்றினை எழுதியிருக்கின்றார். அது பதிவுகள் இணைய இதழிலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. "தகவல்தொடர்புச் செயல்பாட்டுக் கோட்பாடு(Theorie des kommunikativen Hand)” அவரது முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகின்றது.  இவரை ஶ்ரீரங்கன் முதலாளிய அமைப்பை ஆரோக்கியமாக்க முனைந்த வைத்தியராகக் கருதுவார். 

முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான இவரைப்பற்றி நாம் அறிந்துகொள்வதன் அவசியம் கருதி ஶ்ரீரங்கனின் முகநூற் பதிவினைக் கீழே தந்திருக்கின்றேன். 

Friday, March 13, 2026

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்வைத்து 'கூகுள் நோட்புக் எல்எம்'மின் திறனாய்வு!


'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் மிகவும் பயனுள்ள கூகுள் நிறுவனத்தின் மென்பொருள். 
 
எனது சிறு நாவலான 'அமெரிக்கா'வின் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பை அதனிடம் கொடுத்துத் திறனாய்வு செய்ய வேண்டியபோது , அது ஆண், பெண் திறனாய்வாளர்கள் மூலம் செய்த திறனாய்வே இங்குள்ள காணொளி.
முழுமையாகக் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
 

Wednesday, March 11, 2026

நினைவில் நிற்கும் கானம் : "என்ன என்ன வார்த்தைகளோ? சின்ன விழிப்பார்வையிலே. சொல்லி சொல்லி முடித்துவிட்டேன். சொன்ன கதை புரியவில்லை."


'வெண்ணிற ஆடை'  ஜெயலலிதாவின் முதலாவது திரைப்படம்  என்பதை நம்பவே முடியவில்லை. படம் முழுவதுமே ஜெயலலிதாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜெயலலிதாவுக்குத் திரைப்படம் முழுவதும் தன் நடிப்புத்திறமையினை, நடனத்திறமையினை நன்கு வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. படத்தில் அவரது நடிப்பாற்றலைக் கண்டு எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது.

காலத்தால் அழியாத கானம்: "நீ என்பது என்ன? நான் என்பதென்ன?"

 

 
'வெண்னிற ஆடை' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'என்ன என்ன வார்த்தைகளோ' பாடற் காணொளியை  முன்பு பகிர்ந்திருந்தேன். அதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த  முகநூல் நண்பர் அருள்குமார் எஸ்பி (Arul Kumar SP)  அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: " வெண்ணிற ஆடை படத்தில் வரும் முதல் பாடல் தான் ஜெயலலிதா அவர்கள் திரையில் முதன்முதலில் தோன்றி நடித்த காட்சி. கேட்கும் எவரையும் கலங்கடிக்கச் செய்யும் அந்த பாடலின் முதல் அடி : " நான் என்பதென்ன . நீ என்பதென்ன.. ஒரு நினைவு என்பதென்ன ...? நிலையில்லாத உலக மேடையில் நாமும் வந்ததென்ன ...?  - மன சிதைவு என்றால் என்ன என்பதை எளிமையாகச் சொன்ன வரிகள் !! நன்றி தோழர் ."

அவர் கூறியது உண்மைதான் . இதுதான் அந்தப் பாடல் . அவர் சுட்டிக்காட்டியதால் மீண்டும் பார்த்தேன். 

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அம...