Thursday, May 22, 2025

இதய மருத்துவர் இராமசாமியின் ஆரோக்கியமான ஆலோசனைகள்!


இது என் மருத்துவ ஆலோசனை அல்ல. என் கருத்து மட்டுமே. 

மருத்துவர் இராமசாமியின் ((Dr. ramasamy) அறிவுரைகளை உள்ளடக்கிய காணொளிகளை நான் பார்ப்பவன். இவரது இதய நோய் சம்பந்தமான அறிவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மிகவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்களில் ஒருவராக இவரை நான் அடையாளம் காண்கின்றேன். 

இருதய மருத்துவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சர்ஜரி, ஸ்டெண்ட் பொருத்துவதைப் பரிந்துரை செய்கின்றார்கள். இதயம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் நன்கு ஓடும் நிலையிலுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பலர் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுப்பதற்காக பை பாஸ், ஸ்டென்ட்டைப் பரிந்துரை செய்வது தவறானது என்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது. 

பை பாஸ் சர்ஜரி, ஸ்டென்ட் ஒருபோதும் மாரடைப்பைத் தடுக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். மாரடைப்பு ஏற்படுவது அடைப்பு உடைந்து இரத்தக் கட்டிகள் உருவாகி இரத்த ஓட்டத்தை 100% குறைப்பதால் என்பதையும் உணர்ந்தேன். வாழ்க்கை முறையை மாற்றுவதாலும், உரிய மருந்துகள் எடுப்பதாலும், ஆரோக்கியமான உணவினை உட்கொள்வதன் மூலமும் , மன அழுத்தத்தினைக் கட்டுக்குள் வைத்திருப்பதாலும் இருதய இரத்தக் குழாய்களில் ,அடைப்பிருந்தாலும் , அதனை க் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை உணர முடிகின்றது.  

இக்காணொளி மாரடைப்புக்கான அறிகுறிகளை எப்படி அடையாளம் காண்பது, ஏன் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதையும் எமக்குப் புரிய வைக்கின்றது. 

இக்காணொளி EECP மருத்துவ முறை மூலம் இருதய அடைப்புகளைக் கையாள்வது பற்றி இருந்தாலும், இந்நேர்காணலில் மருத்துவர் இராமசாமி வழங்கிய ஆலோசனைகள் முக்கியமானவை என்பதை உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் பகிர்வு.

https://www.youtube.com/watch?v=MZSwTIxDfpc

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்