புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர்.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, June 1, 2025
'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்
புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர்.
Friday, May 30, 2025
பிரவாதம்: எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்'
பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை ஆசிரியராகவும், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு, செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரியர் குழுவைக்கொண்டதாகவும் வெளியான சஞ்சிகையே 'பிரவாதம்'. அரையாண்டுச் சஞ்சிகையான இதன் தொகுதி 3 ஜனவரி - ஜூன் 2003இல் வெளிவந்தது. பிரவாதம் சமூக, விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகை.
மேற்படி தொகுதி 3 கூகி வா தியாங்கோ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் என்று பெயரிட்டிருக்காவிட்டாலும் அவ்விதமே அவரைப்பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கூகி வா தியாங்கோ பற்றியும், அவரது காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பிலக்கியம் பற்றியும், நவீன காலனியாதிக்கம் எவ்விதம் ஆபிரிக்காவைக் கூறு போட்டுத் தன் நலன்களைப் பேணுகின்றது என்பது பற்றியும், காலனியாதிக்க ஆதிக்கத்தின் மொழிகள் எவ்விதம் அடிமைப்படுத்தப்படும் நாடுகளின் மீதான ஆதிக்கத்தில் பங்காற்றுகின்றன என்பது பற்றியும் நல்லதோர் அறிமுகத்தைத் தரும் சிறப்பிதழாக மேற்படி தொகுதி 3 இதழ் வெளிவந்துள்ளது.
இக்கட்டுரையையும், கூகி வா தியாங்கோவின் எழுத்துகளையும் உள்ளடக்கிய மேற்படி இதழை வாசிக்க - https://noolaham.net/project/81/8021/8021.pdf
அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.
எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
Thursday, April 10, 2025
ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!
என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.
Saturday, March 15, 2025
கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
Friday, January 24, 2025
ஓவியர் மாயாவின் மாயாலோகம்!
எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை. ஓவியர் மாயாவின் இயற் பெயர் மகாதேவன். ஜனவரி 22 அன்று தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் முதுமையின் காரணமாக ஓவியர் மாயா மறைந்த செய்தியினை அறிந்தபோது மாயாவின் ஓவியங்கள் சிந்தையில் நிழலாடின. என் பால்ய, பதின்மப் பருவத்து வாசிப்பு அனுபவத்தில் ஓவியர் மாயாவின் ஓவியங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு.
Monday, January 20, 2025
புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!
Friday, January 17, 2025
நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!
நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!
எழுத்தாளரும், நாடகவியலாளருமான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல்வாயிலாக அறிந்தேன். இலங்கைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம். நாடகம், கவிதை, மொழிபெயர்ப்புவ் திறனாய்வு என இவரது பங்களிப்பு பன்முகப்பட்டது குறிப்பாக நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. முதன்மையானது. சகல அடக்குமுறைகளுக்கும் (சமூக,தேசிய, வர்க்க) எதிராகக்குரல் கொடுப்பவை இவரது நாடகங்கள். நாடக அரங்கக் கல்லூரியொன்றினை நிறுவி அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர். இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியிருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. உலக நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.
Saturday, December 28, 2024
அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா.
அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா. பதிவுகள் இணைய இதழில் வெளியான இப்பதிவைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
முகநூலில் துணைப்பேராசிரியர் ஜே.பி.ஜோசபின் பாபா அவர்கள் (இப்பொழுது இவர் பேராசிரியராக இருக்கக் கூடும். விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்) அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்திருந்தார். அவை பற்றி நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களில் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு தருகின்றோம். உங்கள் கருத்துகளையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
Friday, December 13, 2024
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
Tuesday, November 26, 2024
வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!
Wednesday, November 20, 2024
'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. பதிவுகள் மேலும் புதிய ஆக்கங்கள் பலவற்றுடன் வெளியாகியுள்ளது. பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
படைப்புகளையும் , கருத்துகளையும் ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.
சிறுகதை, கவிதை, இலக்கியம், ஆய்வு, நூல் அறிமுகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆக்கங்களை உள்ளடக்கிய பதிவுகள் இணைய இதழ் கணித்தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆரம்ப இணைய இதழ்களில் ஒன்று.
மனங்கொத்தியின் கொத்தல்கள்: கலைச்செல்வன் பற்றிய நினைவுகள்!
![]() |
-எழுத்தாளர் கலைச்செல்வன் - |
கவிஞர் வாசுதேவனின் 'தொலைவில்' கவிதைத்தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு கவிதை கண்ணில் பட்டது, கவிதையின் தலைப்பு 'உயிர்நிழல்'. கவிதையை வாசித்தபோது அது 'உயிர்நிழல்' கலைச்செல்வனைப் பற்றியது என்பதை அறிய முடிந்தது.
'சத்தமிட்டுச் சிரித்து
புயலைப்போல் சினந்து
ஆழங்களில் அமிழ்ந்து
உச்சிகளில் தாவி நீ செய்யும்
உன்னத மாயவித்தைகள்
அவற்றின் உச்ச நிலைகளில்
அமைதியுற்று
உன் உதடுகளிலிருந்து
புகையாய்ப் போயின.
ஆவேசத்துடன் ஆர்ப்பரித்த் நீ
அடைய முடியாததன் முன்னால்
கூற முடியாததன் கொடூரத்தின் முன்னால்
கூற்றுகளுக்கப்பாற்பட்டவை முன்னால்
குழந்தையாய் நின்றாய்.'
கவிஞரின் மேற்படி வரிகள் கலைச்செல்வனின் ஆளுமையைச் சிறப்பாக விபரிக்கின்றன. கவிதையின் வரிகள் அவரது கலைச்செல்வனுடான நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவன. இக்கவிதை வரிகள் எனக்குக் கலைச்செல்வனைப் பற்றிய நினைவுகளைச் சிறகடிக்கச் செய்து விட்டன. கவிதைத் தொகுப்பின் இன்னுமொரு கவிதை 'மனமெனும் மரங்கொத்தி' சிறப்பான உவமை. படிமம். தலைப்பை 'மனமெனும் மரங்கொத்தி' என்று உவமையாக வைத்திருப்பதற்குப் பதிலாக 'மனங்கொத்தி' என உருவகமாக வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். என் மனங்கொத்தியையும் இக்கவிதைகள் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைக்கொத்தியெடுக்க வைத்துவிட்டன.
Saturday, October 12, 2024
தென்கொரிய எழுத்தாளர் ஹான் கங்குக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது !
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மேனாட்டு நூல்கள் பலவற்றை வாசித்து அவை பற்றீய எண்ணப்பதிவுகளை அடிக்கடி எழுதுபவர். அவை பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ஒரு தடவை அவர் புக்கர் விருது பெற்ற நாவலொன்றைப் பற்றிச் சிறு குறிப்பொன்று 'உணவை மறுத்தவள்' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அவர் அந்த நாவலை வாசித்ததற்கு முக்கிய காரணம் அதற்கு புக்கர் விருது கிடைத்ததுதான் என்பதை அப்பதிவை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். அவரை அந்த நாவல் கவரவில்லையென்பதை அப்பதிவின் இறுதி வரிகள் வெளிப்படுத்தின. அவ்வரிகள் வருமாறு;
'எளிமையான இந்த நாவலுக்கு மேன் புக்கர் விருது கிடைத்திருப்பது குருட்டு அதிர்ஷ்டம் என்றே கருதத்தோன்றுகிறது.'
அந்த நாவலை எழுதியவருக்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்துள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க அந்த நாவலும் ஒரு காரணம். அவருக்கு நோபல் விருது கிடைக்க முக்கிய காரணங்கள் இந்நாவலிலுள்ள அவரது கவித்துவமான நடையும், வரலாற்றுத் துயரங்களை எதிர்கொண்ட தன்மையும், நொருங்கக்கூடிய மானுட வாழ்க்கையினை வெளிப்படுத்திய போக்கும் என்று கூறப்படுகின்றது.
Monday, September 9, 2024
தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -
சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
Sunday, September 8, 2024
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: எழுத்தாளர் அரங்கம் (25) - எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அனுபவங்கள்!
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.
அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.
நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம்.
கேட்டுப்பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=380_YhEKI9s
Friday, June 21, 2024
எழுத்தாளர் பா, ராகவனின் கூற்றொன்று பற்றி...
Thursday, June 13, 2024
Friday, June 7, 2024
படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -
- பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் முருகபூபதியின் விமர்சனக் கட்டுரை. -
வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.
Friday, May 24, 2024
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்!
த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!
'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பி...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...