Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Thursday, May 28, 2026

பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும்
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


நிலாவும் வான்மீனும் காற்றும்
மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!

பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா 
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


பாரதியார் பாடல்:  'நடிப்பு சுதேசிகள்'
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட் ஜிபிடி வழி வநகி


    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ

        அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
    ஊமைச் சனங்க ளடீ!

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
    மாக்களுக் கோர் கணமும் - கிளியே
    வாழத் தகுதி யுண்டோ ?

   நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

Friday, May 22, 2026

பாரதியார் பாடல் : சரஸ்வதி காதல் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி.


- வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி. டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி -


பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் அங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!     

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

Tuesday, May 19, 2026

வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்!


வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில்  : சில தருணங்கள்!

இசைத்துப் பாடுவது SUNO 5.5.  டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி



இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.



சில தருணங்கள்!

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

Thursday, May 7, 2026

மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி


மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது  SUNO 5.5  AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி


மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்

மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!

Sunday, May 3, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 A


வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில்  - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.   பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

Friday, May 1, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


வ.ந.கிரிதரனின் பாடல் -  'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' 

வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'   பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

உழைப்புக்கு உரிய  ஊதியம்  வழங்குவோம்.
உழைப்பவர் உயர்வே உலகத்தின் உயர்வாம்.
உண்மையிது உணர்வோம். செயற் படுவோம்.
மண்ணில் மலர்ச்சியை ஏற்றி வைப்போம்.

உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

Thursday, April 30, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் - 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்'! வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி!




வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் கணியன் பூங்குன்றன்.

கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

Monday, April 27, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே

Sunday, April 26, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5   
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

சதுரங்கம் என்பதொரு போர்க்களமே.
அதுபோல் வாழ்வுமொரு போர்க்களமே.
போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கே
பொறுமை மிகவும் அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

பொறுத்தார்  பூமி ஆள்வார்.
போர்க்களத்தில் பொறுத்தார் வெற்றியடைவார்.
சதுரங்கத்தில் சாதனை படைப்பார்.
எதுவந்தபோதும் எழுந்து வெல்வர்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

Saturday, April 25, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'


வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

Friday, April 24, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் : "எம்ஜிஆர் படப் பாட்டென்றால்.. ".




வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் என்று கூறுவேன்.
எடுத்துரைப்பேன் நான் கேளீர்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாசிக்கும் வாய்ப்பற்ற மக்கள்
வசிக்கின்றார் கோடிக் கணக்கில்.
நூல் படிக்கும் வாய்ப்பற்றோர்
நூல் எம்ஜிஆர் பாடல்களே.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

நல்ல கருத்தை எடுத்துரைத்தால்
சொல்வதை மீண்டும் சொல்வதால்
நல்ல கருத்து நிலைக்கும்.
நிலைத்து நிற்கும் மூளையில்.

வ.ந.கிரிதரனின் குரலில் : "என் பிரியம் மிகு யாழ் மண்ணே! ".




வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த  மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

Thursday, April 23, 2026

(ஏப்ரில் 23 உலகப் புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

புத்தகம் அற்ற உலகம்  எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

Tuesday, April 21, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் : பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

 




பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
நங்கையிவள் நயனங்கள் நூறு கதை பேசும்.
நறுங்குவளை மனம்வெட்கி ஒளிந்தோட வைக்கும்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

பொங்குச் சுழித்தோடும் பேராற்றின் சிலிர்ப்பு
பூவையிவள் பேரழகில் ஏறிநிற்கும் மதர்ப்பு.
மார்புற நூலணைத்து மண்பார்த்துச் செல்வாள்.
யாரிவளோ  என்றே ஆடவர் மனமொடிய வைப்பாள்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

அதிகாலை எழில்பெறவே அழகுநடை பயில்வாள்.
அவள் பின்னே மோகித்து ஆடவரும் செல்வார்.
அவள் முகம் காணாவிடின்  மனமொடிந்து கிடப்பார்.
அகக்கண்ணில் அவளுருவம் நிறைந்தே நிலைமறப்பார்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

Saturday, April 18, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5


வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். 

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

Friday, April 17, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.


வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

Thursday, April 16, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!


வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்!

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

தெரியும் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
எரி நட்சத்திரங்கள் கிளர்ச்சி தரும்.
தொலைவுகளில் எத்தனை எத்தனை உலகங்களோ?
மலைப்பைத்  தரும் சிந்தனைகள் தொடரும்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!


வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் வரலாறே வரலாறு.
உலகின் வரலாறு இவர்தம்  வரலாறே.
உழைப்பவர்  வேர்வையும் , உழைப்பும் இங்கு
உண்மையான வரலாற்றை எழுதி வைக்கும்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறிவது நம் கடமை.
மண்ணின் வரலாறு உழைப்பவரின் வரலாறே.
மன்னரின் வரலாறு  வரலாறு அல்ல.
உணர்வோம்.   உள்ளத்தில் அவரைப்  போற்றுவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!

என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...