'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, January 3, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI
பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
காணும் திசையெல்லாம்
'காங்ரீட்'காடுகள்.
'காங்ரீட்' காடுகள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
'காங்ரீட்' சுவர்கள்!
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
ஆதி மானுடர் அண்ணாந்து பார்த்த இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.
வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.
வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.
இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
Friday, January 2, 2026
வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்!
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
Thursday, January 1, 2026
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.
அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!
என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்) என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:
1. என் குருமண் காடே!
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4. இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!
இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன் ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி, பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.
Wednesday, December 31, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்
இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம் அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
Tuesday, December 30, 2025
வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!
வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
Monday, December 29, 2025
அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -
![]() |
| ஓவியர் ரமணி (வி.சிவசுப்பிரமணியம்) |
ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.
பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே. செங்கை ஆழியானின் 'போரே நீ போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.
Thursday, December 25, 2025
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!
இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
கவிதை: கற்பனைப் பெண்ணே! - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI SUNO | இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -
கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது.
அங்குனக்கென்ன வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -
இசை & குரல்: AI SUNO | இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -
ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!
பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!
மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
Tuesday, December 23, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
Monday, December 15, 2025
காலத்தால் அழியாத கானங்கள்: மெல்லப் போ! மெல்லப் போ!
[டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]
https://www.youtube.com/watch?v=9AT_Vh5-Oos
எம்ஜிஆர் சுடப்பட்ட பின் நடித்து வெளியாகிப் பெருவெற்றியடைந்த திரைப்படம் 'காவல்காரன்' . யாழ் ராஜா திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. கொழும்பிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.
கறுத்த டீ சேர்ட்டுடன் , கட்டுமஸ்தான உடலுடன் நடித்திருப்பார் எம்ஜிஆர். சுடுபட்ட பின்னர் அவ்விதமானதொரு ஆரோக்கியமான தோற்றத்துடன், ஆடிப்பாடி, ஓடி நடித்திருப்பார் எம்ஜிஆர் இப்பாடலில்.
எம்ஜிஆர், கவிஞர் வாலி, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் & பி.சுசீலா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத கானங்களிலொன்று இந்தப்பாடல்.
Sunday, December 14, 2025
பாட்டு கேட்கும் நேரம்: 'என்ன சொல்லப் போகின்றாய்?'
படம்: கண்டு கொண்டேன். கண்டு கொண்டேன்.
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடகர்: சங்கர் மகாதேவன்
வரிகள்: கவிஞர் வைரமுத்து
நடிப்பு: அஜித்குமார் & தபு
['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}
https://www.youtube.com/watch?v=Gep0IzKTcFI
Monday, November 24, 2025
புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.
பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':
நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.
'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.
நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.
'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM
குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).
Saturday, November 15, 2025
ஆலயமணி அடிக்கும் கூனன் குவாசிமோடோ - Anthony Quinn
அந்தனி குயீன் ( Anthony Quinn ) சிறந்த ஹொலிவூட் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் நான் முதலில் பார்த்த திரைப்படம் 'The Hunchback of Notre Dame'. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற நாவல். இந்நாவலில் வரும் Notre Dame' ஆலயமணி அடிப்பவரான, கூனனான குவாசிமோடோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
லீ வான் கிளிவ் - 'கெட்டவனில் சிறந்த கெட்டவன்'
'கெட்டவனில் சிறந்த கெட்டவன்' (Best of the Bad) என்பது புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளிவ்வின் ((Lee Van Cleef) கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வசனம். 'The Good, The Bad and The ugly' திரைப்படத்தில் ''The Bad' ஆக நடித்திருப்பார். மிகச்சிறந்த வில்லனாக அதன் மூலம் உருவெடுத்தார். பின்னர் பல 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார்.
'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி!
எத்தனையோ நடிகர்கள் 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்திருந்தாலும், அப்பாத்திரத்துக்கு உயிரூட்டிய நடிகர் , என்னைப் பொறுத்தவரையில், ஷோன் கானரிதான். இவரைத்தவிர வேறெவரையும் என்னால் அப்பாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இவரை எம் பதின்ம வயதுகளில் சீன கானரி என்றுதான் உச்சரிப்போம்.
Thursday, November 13, 2025
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் 'காங்ரீட்''காங்...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...



.png)

