'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, November 10, 2025
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் குரலில், ரஹ்மான் & அமலா நடிப்பில் உருவான இனிய பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'கண்ணே கனியமுதே'.
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
Tamil Song - Ninnaiye Rathi Endru
Singers: K. J. Yesudas,Vani Jairam
Music: M.S.V
Movie: Kanne Kaniyamuthey
Cast: Rahman & Amala
Lyrics: Makakavi Barathiyaar
https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA
Saturday, November 8, 2025
பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]
நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.
இவ்வளவு நடந்த பிறகு யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார். இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும் தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன? இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத் தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.
எவ்வித ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று, சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத் தொழில் நுட்ப விதிகள் மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.
நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை. சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை. இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.
கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான்.
புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.
கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும் காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs
Friday, October 31, 2025
காலத்தால் அழியாத கானம்: 'காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்."
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கவிஞர் வாலியின் கவித்துவமான வரிகளில் , பாடகர் டி.எம்.எஸ்ஸின் இன் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மனத்தை மயக்கும் இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத கானங்களில் ஒன்று. எத்தனை தடவைகள் கேட்டிருப்பேன். இன்னும் அலுக்கவில்லை. சலிக்கவில்லை.
'நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்'
இவ்வரிகள் கேட்கும்போதே இன்பத்தைத் தரும் வரிகள். காற்று வாங்கப் போய் எத்தனை தடவைகள் இயற்கைக் கவிதையை இரசித்து திரும்பியிருப்போம். அனுபவம் உருவாக்கிய வரிகள் இவை.
"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை"
சங்கப் பாடல்களிலிருந்து ஊர் துஞ்சும் இரவுகளில் துஞ்சாதிருக்கும் காதல் உள்ளங்களின் உணர்வுகளை இரசித்து வந்திருக்கின்றோம். தமிழ்த் திரைப்படப்பாடல்களாகவும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தானிந்தப்பாடல் வரிகளும்.
"கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"
காதல் வயப்பட்ட உள்ளங்கள் அனுபவிக்கும் இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.
"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை...
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"
பார்வையை மீனாகவோ அல்லது நீந்துமோர் உயிரினமாகவும், பருவத்தை ஓடையாகவும், உள்ளத்தை ஊஞ்சலாகவும், மேடையாகவும் உவமையாக்கியுள்ள கவிஞரின் கவித்துவம் சிறப்பானது. காதலனொருவன் தன் காதலுக்குரியவளின் நினைவால் விரகதாபத்தால் வாடுவதை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க, அனுபவ முத்திரைகளை உள்வாங்கிய வரிகள்.
Thursday, October 30, 2025
'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva): "சூட மானி கேபலால"
'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva) பாடிய் பாடல்கள் எப்பொழுதும் பசுமை நிறைந்த நினைவுகளாக எம் நினைவில் நிலைத்து நிற்பவை. குறிப்பாகச் "சூட மானி கேபலால" துள்ளிசைப் பாடலைக் குறிப்பிடலாம்.
'பைலா' போர்த்துக்கேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இன்றுவரை உயிர்த்துடிப்புடன் நிலைத்து நிற்கும் இசை வடிவம்.
இப்பாடலைக் கேட்கும் எவரையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும், துள்ளியெழுந்து ஆட வைக்கும். அப்படித்தான் எம் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் எம்மை ஆட வைத்தது.
அக்காலகட்டத்தில் பல்கலைககழகத்தில் நடந்த பல்வகைக் களியாட்ட இரவுகளிலும் , சுற்றுலாக்களிலும் தவறாது ஒலித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல்.
இவர் தென்னிலங்கையின் மாத்தறையில் 13 ஜூலை 1944 பிறந்தவர். பல்வேறு இசைக்குழுக்களில் பாடிப்புகழ்பெற்ற இவர் தனக்கென்றோர் இசைக்குழுவை வைத்திருந்தவர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். ஆட்டிசம் ( Autism ) நரம்பு வளர்ச்சிக் குறையுள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்த பாடகர். அதற்காக ஓர் இசை நிகழ்ச்சியையும் கொழும்பில் நடத்தியவர். திரைப்படப்பின்னணிப் பாடகராக, பைலா இசைப் பாடகராக, சமூகச் செயற்பாட்டாளராக மக்கள் மனத்தில் தன் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்பவர் 'பைலா' மன்னன் டெஸ்மண்ட் டி சில்வா.
இறுதிக்காலத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் 9 ஜனவரி 2022 அன்று மாரடைப்பால் மறைந்தார்.
"சூட மானி கேபலால" பாடலைக் கேட்டுத்துள்ளி ஆடிட -
https://www.youtube.com/watch?v=HCG0EBbdgI4
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]
இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் 'யாழ்தேவி'ப் பாடல்!
இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலை யாழ்தேவி பற்றியொரு பாடல் பாடியிருக்கின்றார். அது: "இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது"
பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!
இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
Saturday, October 25, 2025
காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'
கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.
கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.
https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'
'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில், #கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.
அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.
இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.
https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
Sunday, October 19, 2025
காலத்தால் அழியாத கானம்: "காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்"
Monday, October 13, 2025
காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "
"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -
'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது. நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ். பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன். இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ, தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.
இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர் விஜயன்.
காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார். ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
Saturday, October 11, 2025
நினைவில் நிற்கும் காட்சி: தருமியாக திருவிளையாடலில் நடிகர் நாகேஷ்!
மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.
இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.
இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?
அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.
அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.
https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG
கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில் , சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பு' !
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!
கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன் எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, October 10, 2025
காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"
பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் விருதினைப் பெற்றுத்தந்த பாடல். இசை - எம்.எஸ்.வி. ]
பாடலின் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப் பாடல் வரிகளிலில் அடங்கும். இப்பாடலைக்கேட்கையியெல்லாம் இவ்வரிகளைக் கவிஞர் மிகவும் இலகுவாக, அனுபவித்து எழுதியிருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. கவிஞருக்கு மானுட வாழ்க்கை பற்றிய பாடல்கள் கை வந்த கலை. வாழ்க்கை அனுபவத்தின் சாரத்தினைப் பிழிந்து எடுத்து வைத்த வரிகள்.
வாணி ஜெயராமை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல்களில் முதன்மையானது. அவ்வளவு இலகுவாகப் பாட முடியாத பாடலைச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார்.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தாலும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் , என்னைப்பொறுத்த வரையில் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ இராகங்கள்' தான். பாடகி பைரவியாகவே மாறியிருப்பார். உண்மையில் ஶ்ரீவித்யா தன் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி போல் சிறந்த பாடகியாக வந்திருக்க வேண்டியவர். நடிப்பில் கவனத்தைத்திருப்பியதால் அதனைத் தவற விட்டதாகவே உணர்கின்றேன்.
Thursday, October 9, 2025
காலத்தால் அழியாத 'செம்மீன்' மலையாளப்படப் பாடலொன்று!
எழுத்தாளர் தகழி சிவசங்கரம்பிள்ளையின் புகழ் பெற்ற மலையாள நாவல்களிலொன்று 'செம்மீன்'. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் , காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது.
Tuesday, October 7, 2025
'ராஜா ராணி'யில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,கலைஞரின் வசனமும்!
'ராஜா ராணி' நடிகர் திலகமும்,கலைஞரும் இணைந்த திரைப்படம். அதில் வரும் கலைஞரின் வசனங்கள் திரைவானில் மிகுந்த புகழ் பெற்றவை.
அத்திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் கலைஞரின் வசனங்களை இக்காணொளியில் கேட்டு மகிழுங்கள்.
'டிஜிட்டல் ' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
நடிகர் மம்முட்டியின் மீள்வருகை! வாழ்த்துகள்!
என் அபிமான நடிகர்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி சிறிது காலம் உடல் நிலை காரணமாக ஒது ங்கியிருந்து மீண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அதே உற்சாகத்துடன் அவர் திரைவானில் சிறகடித்துப் பறக்க வாழ்த்துகள்.
Monday, October 6, 2025
காலத்தால் அழியாத கானம்: 'எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்'
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -
இடையிலொரு காலத்தால் அழியாத கானமொன்றைக் கேட்கும் நேரம்: 'முகராசி'யில் , திரையிசைத் திலகம் கே.வி.எம்மின் இசையில், டி.எம்.எஸ்ஸின் குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கவிஞர் கண்ணதாசனின் மொழியில் ஒலிக்கும் பாடல். அறுபதுகளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் இதுவுமொன்று.
பாடலைக் கேட்க https://www.youtube.com/watch?v=FQy9u9hekT8
காலத்தால் அழியாத கானம் - ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன். நீ ஒரு தனிப்பிறவி.
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -
என் பால்ய பருவத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் ஒன்று. கவிஞர் கண்ணதாசனுக்கு உரிய எளிய,ஆனால் நெஞ்சைக்கொள்ளை கொள்ளும் மொழி, கே.வி.எம்மின் இசை, அபிமான நடிகர்களின் உற்சாகமும், துடிப்பும் மிக்க நடிப்பு, அதை அப்படியே குரலில் பிரதிபலிக்கும் பாடகர்கள் டி.எம்.எஸ் & பி,சுசீலாவின் குரலினிமை இவையெல்லாம் இப்பாடல் என் நெஞ்சில் அழியாமல் நிலைத்து நின்று விட்டதற்கான காரணங்கள்.
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=rx1SzJsq9tU
காலத்தால் அழியாத கானம் ; 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது'
விவசாயி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களிலொன்று. கவிஞர் உ டுமலை நாராயணகவியின் வரிகளும், திரையிசைத்திலகத்தின் இசையும், டி.எம்.எஸ் & பி;சுசீலாவின் குரலினிமையும், எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயாவின் நடன அசைவுகளும், நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
என் பால்ய வயதில் வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த படங்களிலொன்று தேவரின் 'விவசாயி'.
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=uAI_apwFvrg
Wednesday, October 1, 2025
காலத்தால் அழியாத கானம்: 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?'
கவிஞர் வாலியின் வரிகளில், எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் ஒலிகும் இந்தப் பாடல் என் பால்ய பருவத்துடன் பின்னிப் பிணைந்ததொன்று. அப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் , ஏதோவொரு நிகழ்வில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல். எம்ஜிஆர் படப் பாடல்களுக்கு உரிய சுறுசுறுப்பு, எளிய இனிய வரிகள், உற்சாகம், மகிழ்ச்சி, வேகம் , இன்குரலினிமை , தொய்வற்ற இன் மெல்லிசை, நிறைந்த பாடல்.
புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG] தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...


.png)
.png)

.png)






