Wednesday, January 28, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
எண்ணங்கள் இல்லையென்றால் என்ன உண்டு?
எண்ணங்கள் எம்மை வழிநடத்தும் பாதைகள்.
எண்ணங்களை மீறி ஒன்றும் இல்லையா புறத்தே.
எண்ணங்களே எம் வாழ்வின் ஆதாரங்கள்.
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.பால்யப் பருவத்து எண்ணங்கள் இன்றும்
பதின்மப் பருவத்து எண்ணங்கள் இன்றும்
இளமைப் பருவத்து எண்ணங்கள் இன்றும்
இருப்பதால் அன்றோ இனிக்கிறது இருப்பு.
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
தொடரும் எண்ணங்களால் தொடரும் வாழ்க்கை.
தொடரும் எண்ணங்களின் பரிணாம வளர்ச்சியில்
தொழில் நுட்பம் பிறக்கும், சிறக்கும்.
எழில்மிக்க நகர்கள் மலரும் எங்கும்.
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
அன்னையின் நினைவுகள் , எந்தையின் நினைவுகள்
இன்னமும் நினைவிலோடும் காதலின் நினைவுகள்
என்னில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்.
என்னிருப்பு தொடர்வதும் எண்ணங்களினால் தானே.
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
Subscribe to:
Post Comments (Atom)
[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திர...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
No comments:
Post a Comment