Thursday, January 1, 2026

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

காதலுக்குத் தூது செல்லும் இந்தநிலா.
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தநிலா.
சிந்தையைக் கொள்ளை கொள்ளும் இந்தநிலா.
எம்முன்னோர் களித்துக் கிடந்த இந்தநிலா.

உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.






No comments:

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...