Saturday, January 3, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.



வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம். 

இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

உணர்வால் தாழ்ந்து கிடக்கும் சமயங்களில்
உற்சாகம் பெறுவதற்கு உதவுவது இயற்கை.
மனம் சோர்ந்து கிடக்கும் பொழுதுகளில்
மனச் சோர்வு அகற்றுவதும் இயற்கை.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

இன்பத்தை வாழ்வுக்கு வழங்குவது  இயற்கை.
இருப்புக்கு அர்த்தம் தருவதும் இயற்கை.
இயற்கையைப் பேணுவது நமது  கடமை.
இயற்கையைப் பேணுவோம், வளம் சேர்ப்போம்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1  -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.

***********************************************************

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்  'காங்ரீட்''காங்...

பிரபலமான பதிவுகள்