Thursday, January 8, 2026

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!


திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர். ஆரியர் தமிழரைத் திராவிடர் என்றழைத்தனர். வடக்கில் திராவிடரிடமிருந்து ஆதிக்கத்தைப் பெற்றதும் தமிழர்கள் (திராவிடர்) தென்னிந்தியாவில் ஒடுங்கினர். 
 
அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது. 
 இப்பொழுது சுதந்திரம் அடைந்த பிறகு தெற்கு மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் அவர்களால் கடந்த 58 வருடங்களாகக் க் காலூன்ற முடியவில்லை. இப்பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால் தமிழகத் தமிழரை அவன் தெலுங்கன், இவன் மலையாளத்தான் என்று பிரித்து , அப்பிரிவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்கின்றனர். இதற்குப் பலியானவர்களை நான் உண்மையில் ஆரியரின் கைக்கூலிகள் என்றே கூறுவேன்.
 
பெரியார் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாகவே இருந்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்னும் பிரிவுகள் தமிழில் ஏற்பட்டது ஆரியரின் சூழ்ச்சியால் என்பது அவரது திடமான கருத்து. அவரைப்பொறுத்தவரையில் தென்னிந்தியர் அனைவரும் தமிழர்.அதாவது திராவிடர். இது பற்றி அவர் தன் கட்டுரைகளில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
 

 

No comments:

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!

வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்! இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI அதிகாலைகளில் , அந்திவேளைகளில்  அன்று கல்லுண்டாய...

பிரபலமான பதிவுகள்