'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, January 8, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI ஓவியம் - Google AI
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.கல்லுண்டாய் வைரவர் தாண்டிச் செல்வேன்.
காக்கைதீவு கண் முன்னே விரியும்.
காலையில் மீன்சந்தை உயிருடன் விளங்கும்.
கண்களில் காட்சி இன்னும் தெரிகிறது.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
கடலட்டை சூளைகளில் அவியும். அவிந்ததைக்.
காயப் போட்டிருப்பர் கடற் தொழிலாளர்.
கடற் பறவைகளோ நிறைந்து கிடக்கும்.
காட்சியை மறக்கத்தான் முடியுமா?
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தொடர்ந்து பயணிப்பேன். நாவாந்துறை தெரியும்.
கடந்து சென்றால் பொம்மைவெளிக் குடியேற்றம்.
முஸ்லிம் மக்கள் வாழும் குடியேற்றம்.
மறக்க முடியாத காட்சிகள் அல்லவா.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.
V.N. Giritharan Songs - https://www.youtube.com/@girinav1 - My songs with music and vocals by Artificial Intelligence. Listen and enjoy. Share your thoughts. If you like the songs, please don't forget to subscribe to the 'V.N. Giritharan Songs' channel. Your support will greatly help in the growth of this channel. Thank you.
***********************************************************
Subscribe to:
Post Comments (Atom)
காலத்தால் அழியாத கானம்: "உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே"
'பாக்தாத் திருடன்' திரைப்படத்துக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. எம்ஜிஆரும், வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்ற முக்க...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
No comments:
Post a Comment