'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, January 25, 2026
காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'
'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன.
கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது. இதுவும் சிறப்பாகத்தானுள்ளது. பாடலின் இறுதிச் சரணத்தில் வரும் ஜெயலலிதாவின் நடன அசைவுகள் இப்பாடலின் சிறப்பான அம்சம். ஜெயலலிதா சிறந்த நர்த்தகி. இது போன்ற அவரது நடனத்திறமையினை வெளிப்படுத்தும் காட்சிகளை உள்ளடகிய பாடல்கள் பொதுவாக எனக்குப் பிடித்தவை. அவர் அறுபதுகளில் தமிழகத்தில் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் நடன நிகழ்ச்சியைப் பல மேடைகளில் நடத்தியவர். மிகுந்த வரவேறபப் பெற்ற நிகழ்வு அது. அதனால்தான் அவர் 'கலைச்செல்வி' ஜெயலலிதா என்றும் அழைக்கப்பட்டார். அந்நடன நிகழ்வுக் காட்சி யு டியூப்பில் கிடைக்குமா என்று அவ்வப்போது தேடிப் பார்ப்பதுண்டு. இதுவரையில் அதற்கான் அதிர்ஷ்ட்டம் வாய்க்கவில்லை.
https://www.youtube.com/watch?v=9IKQLJPzyvs
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் முழுமையாக:
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ
மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ
தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ
மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனைக் கேட்டு நடை போட்டதோ
இங்கு அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...


No comments:
Post a Comment