'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, January 27, 2026
" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர். நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன். ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர் பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும் பாடல் மூலம்தான்.எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டத்தில் நிலவிய ஶ்ரீமா அம்மையாரின் ஆட்சியில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் பொருட்டு , இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் , உள்ளூரில் தயாரிக்கபப்ட்ட் பல தமிழ்த்திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், கோமாளிகள் போன்றவை முக்கியமானவை. அவற்றில் எஸ்.ராமதாஸ் எழுதி வானொலி நாடகமாகப் புகழ்பெற்ற கோமாளிகள் திரைப்படமாக வெளியானபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பும் திருகோணமலை ஆகிய நகர்களில் 75 நாட்களைக் கடந்து ஓடிய ஒரே திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றுதான் " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்'' பாடல். கோமாளிகள் திரைப்படத்துக்கான வானொலி விளம்பரத்திலும் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்த பாடல். அதனால் கோமாளிகள் திரைப்படத்தை நினைத்தால் உடன் நினைவுக்கு வரும் பாடலும் இதுதான். இந்த ஒரு பாடல் மூலம் எம் நினைவில் நிலைத்து நிற்பவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம்.
அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இவர் மறைந்த தகவலினை முகநூல் நண்பர் குருநாதன் முத்தையாவின் முகநூற் பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.
இவர் நினைவாக, கோமாளிகள் திரைப்படத்தில் இவர் பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=VkqRl9GbRQ4
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...
No comments:
Post a Comment