Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts
Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts

Tuesday, June 2, 2026

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!


 

என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். 

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "

Saturday, May 30, 2026

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!


என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும்.

ராணி வாராந்தரியில் இரு பக்கங்கள் சிறுவர் ஆக்கங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒரு பக்கத்தில் சிறுவர் தொடர்கதையொன்று வெளியாகும், அடுத்த பக்கத்தில் விடுகதைகள் , வேறு பல்சுவைத்துணுக்குகள் போன்றவை வெளியாகும்.

அண்மையில் இணையத்தில் பழைய ராணி இதழ்களின் சில பக்கங்களைக் கண்டேன். முகநூல் நண்பர் மோகன்குமார் பகிர்ந்திருந்தார். அதிலுள்ள ராணி இதழ்கள் நான் தீவிர வாசிப்பில் இறங்குவதற்கு முன் வெளியானவை. இருந்தாலும் அதே மாதிரியான வடிவமைப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கியபோது ராணி வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் மேற்படி ராணி இதழின் பக்கங்கள் பழைய நினைவுகளை எழுப்பி விட்டன.

Sunday, May 17, 2026

பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்


பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல்  வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம்   வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.

Saturday, May 16, 2026

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

அமரர் ஈழநாதன் 


எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நூலகம் நிறுவனத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இப்பதிவு துணை புரியும். பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்து கொள்கின்றேன்.  இப்பதிவுகள் நூலகம் நிறுவனத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதால் முக்கியமானது. நூலகத்தின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட இப்பதிவு உதவியாகவிருக்கும்.  மேலும் அமரர் ஈழநாதனின் ஆரம்பக் காலத்துப் பங்களிப்புகளை மறந்து விட முடியாது. இப்பதிவுகள் அவரது பங்களிப்பையும் எடுத்துக்காட்டும்.

1. பதிவுகள் - மே 2006 இதழ் 77  -  நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்! - https://www.geotamil.com/pathivukal/noolagam_forum_discussion.html

2. பதிவுகள் - 15 ஜூலை 2020  - வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -     - வ.ந.கிரிதரன் - 

தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது  நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால்  நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.

நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம்  குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

Sunday, May 3, 2026

யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம் -


யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition
Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம்  - 

https://www.amazon.com/dp/B0GX3B894L

காவிரிப்பூம்பட்டினம் எவ்விதம் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ அவ்விதமே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் காலப்போக்கில் மாந்தைதன் புகழ்மிக்க துறை முக அந்தஸ்தினை இழந்திருந்தது போல் இழந்திருந்தாலும் முக்கியமான துறைமுக நகராக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்தும் பலராலும் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளில், திருப்புகழில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்!


வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்!


வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். மொழிபெயர்ப்பு  - எழுத்தாளர்  லதா ராமகிருஷ்னன் - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். வெளியீடு - பதிவுகள்.காம் வெளியீடு!

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம் 

1. An Immigrant - வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன் - https://www.amazon.com/dp/B0G1NJDDBB

2. Amerivca - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன் - https://www.amazon.com/dp/B0G1L9D2G5

காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு! பதிவுகள்.காம் வெளியீடு!


காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள்  - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு! பதிவுகள்.காம் வெளியீடு!

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம் 

வ.ந.கிரிதரன் - காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் - பதிவுகள்.காம்
  

https://www.amazon.com/dp/B0DV76H5BS

நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.

அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்கள்!


அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்கள்!

அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக, பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவந்த எனது  நாவல்கள்  இவை!  இவை பதிவுகள்.காம் வெளியீடுகள்!

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம் 


1. அமெரிக்கா - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B08T7TLDRW

2. குடிவரவாளனந் வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0G1RWLZXL

3. நவீன விக்கிரமாதித்தன் - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0F3GPD1VZ

4. பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0F1RCDLNR

அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் கட்டுரைத் தொகுதிகள்!

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம்

அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக, பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுதிகள் இவை!

வ.ந.கிரிதரனின் அமேசன் - மின்னூற் பதிப்புகளாக வெளிவந்த மின்னூல்கள் - https://vngiritharan230.blogspot.com/2026/05/blog-post.html#more


1. வ.ந.கிரிதரன் - நல்லூர் ராஜதானி நகர அமைப்பு : திருத்திய இரண்டாம் மின்னூற் பதிப்பு - பதிப்பகம் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B0F8S6B6R4

2. வ.ந.கிரிதரன் - யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் - பதிப்பகம் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B0GX3B894L

3. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுதி 1) - பதிப்பகம் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B08TBD7QH3

4. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுதி 2) - பதிப்பகம் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B0DK7RDQFR

5. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்: அறிவியற் கட்டுரைகள் - பதிப்பகம் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B0DJN8HBB6

Tuesday, April 28, 2026

அழியாத கோலங்கள்: ஜீவபூமி (ராணிமுத்து) நினைவுகள்!


மானுடரின் வாசிப்பு அனுபவங்கள் பல படிகளைக்கொண்டவை. சிறுவர் இலக்கியம், வெகுசன இலக்கியம் (சரித்திர , சமூக, மர்ம நாவல்கள், காமிக்ஸ்) தீவிர இலக்கியம் எனப் பல படிகளைக்கொண்ட அனுபவங்கள். அவ்வகையில் அனைத்து வகை இலக்கியப் படைப்புகளையும் , அவற்றின் முக்கியத்துவத்தையும் மதிப்பவன் நான்.

Monday, April 20, 2026

கவிதை; குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -


இந்தக் கவிதை ஆஸ்திரியாவிலிருந்து , ஆண்டுக்கு இரு தடவை வெளியாகும் பன்னாட்டிதழான W & W – Words and Worlds Magazine (Austria) இதழில் வெளியான ,எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ,  வெளியான கவிதை.
W & W – Words and Worlds Magazine இதழுக்கான இணைய இணைப்பு - Surrendering Myself at the Hands of Winter!  [கவிதைக்கான டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி]

கவிதை;  குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான

என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.

இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

பல தசாம்சங்களாக நான் டொரோண்டொவில்
வாழ்ந்து வருகின்றேன்.
குளிர்காலங்கள் வருகின்றன.
குளிர்காலங்கள் போகின்றன.

குளிர்காலம் பற்றிய என் மனச்சஞ்சலங்களும்
வருகின்றன.
போகின்றன.

நியதிகள் மாற்ற முடியாதவை என்று
அப்போதெல்லாம் என்னையே நான்
சமாதானப்படுத்திக்கொள்கின்றேன்.
இதைக் குளிர்காலத்துடனான என்
சரணாகதி என்று நீங்கள் கூறக்கூடும்.
அதை நான் மறுத்துரைக்கப்போவதில்லை. 

வாசிப்பும், யோசிப்பும்: நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -


எந்தத்துறையில் படிப்பவர்களும் முதலில் அந்தந்தத் துறையின் ஆரம்ப வரலாற்றைப்படிப்பார்கள். பின்னரே அதன் தற்கால விடயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் நம் கவிஞர்களுக்கு மட்டும் இந்தக் கவலை இல்லை.

இவர்கள் கவிதையின் வரலாறு பற்றிக் கவலைப்படுவதில்லை. மரபுக்கவிதை பற்றி குறைந்தது அறிந்து கொள்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ முயற்சி செய்வதில்லை.

மரபுச் சூத்திரங்களுக்குள் சிக்கிச் சுழல்வதற்கு நானும் விரும்புவதில்லை. நவீனத்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் மரபுகளை உடைத்தெறிந்தவை. 

ஆனால், அதற்காக நான் மரபுக்கவிதை பற்றி அறியத்  தேவையில்லை என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அழியாத கோலம்: ராணிமுத்துப் பிரசுரமாக லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு'!


அண்மையில் veryrare book முகநூற் பக்கத்தில்  ராணிமுத்து பிரசுரத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான எழுத்தாளர் லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு' நாவலின் பக்கங்களைப் பகிர்ந்திருந்தார். 

என் நினைவு குருவி உடனடியாகவே அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டது. எவ்விதப் பொறுப்புகளுமற்று , பெற்றோரின் அரவணைப்பில் இன்பமாக வாழ்ந்த பால்யப்பருவத்து நினைவுகள் எப்பொழுதும் மகிழ்ச்சி மிக்கவை.

லக்ஷ்மி அம்மா, அப்பாவின் காலத்து எழுத்தாளர். மருத்துவர் . திரிபுரசுந்தரி என்பது அவர்தம் இயற்பெயர். அப்போது எழுத்திலிருந்து சிறிது ஒதுங்கி, தென்னாபிரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  

கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -


என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe)  அவர்கள். என்னை அவருக்குத்  தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர்.

Tuesday, April 14, 2026

பிணக்கு! - வ.ந.கிரிதரன் -


அவ்வப்போது நான் CMR வானொலியின் இரவுத் தமிழ்ச் சேவையைக் கேட்பதுண்டு. குறிப்பாக ஒலிபரப்பாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சியை, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது கேட்பதுண்டு. இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெறும் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ஒரு சொல்லைக் குறிப்பிடுவார்.  தொடர்ந்து வரும் நேயர்கள் கேட்கும் கேள்விகள், அவற்றுக்கான அவர்தம் எதிர்வினைகளின் அடிப்படையில் இறுதியில் நேயர்கள் பதிலைக் கண்டு பிடிப்பார்கள். சில சமயங்களில் மறக்க முடியாத சொற்களில் ஒன்றாக அச்சொல் அமைந்து விடும். அவ்விதமானதொரு சொல்லான கவரிமா (கவரிமான் என்று தவறாக அழைக்கப்படும் சொல்) பற்றிச் சொல்லாடலில் வந்ததுபற்றியொரு பதிவினை முன்னர் இட்டிருந்தேன். அதுபோல் இன்னுமொரு சொல்லும் மறக்க முடியாத வகையில் சொல்லாடலை நினைவில் நிறுத்தி விட்டது. அது பற்றிய பதிவு இது.

அது ஒரு வெள்ளி இரவு. நேரம் 11.52 . அடடா 'சொல்லாடல்' நடந்து கொண்டிருக்குமே  என்ற எண்ணம் தோன்றவே 101.3 FM அலைவரிசைக்குச் சென்றால் சொல்லாடல் நடந்து கொண்டிருந்தது. நேரம் 11.54. இன்னும் நேயர்களில் எவரும் விடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் நேயர்கள் சொல்லை நெருங்கி விட்டிருந்தார்கள் என்பதைச் செந்தில்நாதனின் எதிர்வினைகளிலிருந்து அறிய முடிந்தது. 

Monday, April 13, 2026

எழுத்தாளர் த.சிவதாசனின் 'காலம் 63' கட்டுரை 'கனடா நாற்பது'வும், வரலாற்று இருட்டடிப்பும்! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஆய்வாளர்கள் அவதாரம் எடுத்ததும் வரலாற்றை மூடி மறைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுவர். எழுத்தாளர் ரதன் மகரந்தன் என்னும் பெயரில் சுபமங்களா சஞ்சிகையில் 'கனடாவில் தமிழ்' என்னுமொரு கட்டுரையை எழுதியபோது அக்காலகட்டத்தில் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்த பலரைத் தவிர்த்திருந்தார். அது பலத்த வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் ஒருவர் , ப.ஶ்ரீகாந்தனாக இருக்க வேண்டும், வாசகர் கடிதம் எழுதி அதனையும் சுபமங்களா  வெளியிட்டிருந்தது. 

Saturday, April 11, 2026

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -


[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக்  கேட்கும் ஆற்றலை வளர்க்க,  அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள  அறிவியல் கட்டுரைகள் , நூல்கள்  எழுதப்பட வேண்டும்.  அறிவு பகிரப்பட வேண்டும்.  அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள். 

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. 

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன் 


அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

Friday, April 10, 2026

எழுத்தாளர் கற்சுறாவின் 'நூலகம்' பற்றிய குற்றச்சாட்டுகள்...

எழுத்தாளர் கற்சுறா

அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா நூலகம் பற்றியும், 'நூலக' அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் சஜீவன் பற்றியும் , சஜீவனின் கிளப் ஹவுஸ்ஸில் நண்பர் பரதனுடன் நடந்த உரையாடல் பற்றியுமொரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதுவரை தானும், தன் நண்பர்களும் நூலகத்துக்கு அனுப்பிய பணத்தைத்  திருப்பி அனுப்பும்படியும், நூலகத்தில் உள்ள தனது நூல்கள், சஞ்சிகைகளை நீக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். 

Monday, April 6, 2026

அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய வெளியீட்டு அறிவிப்பும் பற்றி... வ.ந.கிரிதரன் -


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் பொதுமக்களுக்காக எழுதப்பட வேண்டும், ஏனெனில்: அறிவு பகிரப்பட வேண்டும். உண்மை பரவ வேண்டும். சிந்தனை வளர வேண்டும்.

'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றி.... - வ.ந.கிரிதரன் -


 

எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் நியூயோர்க் மாநகரில் நடைபெற்ற 'வாழும் தமிழ்' நிகழ்வில் ஆற்றிய ஆங்கில உரையினையும், அதன் கூகுள் தமிழாக்கத்தையும் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் 'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"அக்காலத்தில் காலம் செல்வம், ‘வாழும் தமிழ்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய நிகழ்வை, அதாவது ஒரு புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவரது அனுமதியுடன் இந்த விழாவின் பெயரை நாங்கள் அவரிடமிருந்து பெற்றோம். இந்த நிகழ்வு அவரது கனவுகளின் வளர்ச்சிநிலை. ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லை உருவாக்கிய செல்வத்தின் மனநிலையை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். இவ்வுலகின் எந்தவொரு சிறந்த மொழியையும் போலவே, தமிழும் இங்கு என்றென்றும் வாழப்போகிறது. நாம் அதை வாழவைக்கவில்லை. அப்படியென்றால், ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லின் பொருள் என்ன? செல்வம் அக்காலத்தில் ஒரு அகதியாக இருந்தார்; இலங்கையிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் டொராண்டோவுக்கும் குடிபெயர்ந்தார். தனிப்பட்ட முறையில் அவருக்கு அந்தச் சொல்லின் பொருள் என்ன? அது அவருக்கு ஒரு மந்திரமாக இருந்தது; முப்பது ஆண்டுகளாக அதைத் தன் நெஞ்சில் சுமந்து, தன் வாழ்நாள் முழுவதையும் அதற்காகவே செலவிட்டார்."

கி.வா.ஜகந்நாதன் 

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!

  என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முக...