| தகழி சிவசங்கரப் பிள்ளை |
எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:
செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.
நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."
"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."
இதற்கு என் எதிர்வினை இதுதான்:
"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.
செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது. இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"
.jpg)









