Sunday, December 14, 2025

வீரகேசரி மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!


வீரகேசரி நிறுவனத்தாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வீரகேசரி இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, தமிழ் அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள். இன்று இணையத்தொழில் நுட்பமுள்ள காலகட்டம். வீரகேசரியின் பழைய பிரதிகளை வெளிவந்த ஆண்டிலிருந்து இன்று வரை பார்க்கும் வசதிக்கொண்ட வசதியினை ஏற்படுத்தினால், அது வாசகர்களுக்கும், கலை,இலக்கிய ஆளுமைகளுக்கும், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கும், அவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் , ஊடகவியலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக அமையும். அதற்காக நியாயமான கட்டணத்தையும் அறவிடலாம். இதனைச் செய்வதால் இலாபமே. ஏன் இதுவரை இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.


இக்கோரிககை வீரகேசரி நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்துத் தமிழ் ஊடகங்களுக்கும்தாம்.

['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}

No comments:

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...