Tuesday, December 2, 2025

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'


"சாவித்திரியின் பெரிய விருப்பம்" என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழந்தைக்கதை.   எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுதிய இப்புத்தகம் ஒரு எளிய கதை மட்டுமல்ல; இது குடும்பம், இடப்பெயர்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் சொந்தம் போன்ற விடயங்களை விபரிக்கும் ஒரு  மென்மையான படைப்பு.

இக்கதை சாவித்திரி என்ற துடிப்பான சிறுமியை மையமாகக் கொண்டது, பல குழந்தைகளைப் போலவே, அவளும் புத்தகங்களை நேசிக்கிறாள், சாகசங்களைக் கனவு காண்கிறாள்,  இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த அவளது பெற்றோர் கனடாவில் அயராது உழைக்கிறார்கள்.   திருமண மோதல்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கும்போது, பிரிவை ஏற்படுத்தும்போது  அதனால் குழந்தைகளிடத்தில் ஏற்பாடும் உளவியல் பாதிப்புகளைக் கதை எடுத்துக்கூறுகின்றது.   

"சாவித்திரியின் பெரிய விருப்பம்" குழந்தைகள் வளர்ந்து  வரும் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்த குடுமபத்தின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை விபரிக்கும் கதையாகும்.

தாய், தந்தையருக்கிடையில் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றுடன் ஒன்றிணைந்துக்குக் குடும்பம் என்னும் பாதுகாப்பை வழங்குவது அவசியம் என்பதை வெளிப்படுத்தும் கதைதான் இந்தக்கதை. 

AI உதவியுடன் தழுவி உருவாக்கப்பட்ட ஓவியங்கள், சாவித்திரியின் உணர்ச்சிகளையும் குடும்பத்தின் நிலையினையும்  சிறப்பாகப்  படம் பிடித்துக் காட்டுகின்றன.அவை கதையின் மையக் கருத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன.

சுருக்கமாகக் கூறினால் குழந்தைகளின் உளவியலில் இணைந்த குடும்பத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் கதை. அதுவே குழந்தை சாவித்திரியின் பெரு விருப்பமும் ஆகும்.

இக்கதை ஆங்கிலத்திலுன் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசன் - கிண்டில் தமிழ் மின்பதிப்புக்கான இணைப்பு  - https://amzn.to/48e2R1I

ஆங்கில நூலுக்கான இணைப்பு -  https://amzn.to/49T7Kyy

No comments:

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'

"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...

பிரபலமான பதிவுகள்