Thursday, December 25, 2025

கவிதை: கற்பனைப் பெண்ணே! - வ.ந.கிரிதரன்


இசை & குரல்: AI SUNO |
இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -

கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?

பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?

அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது.
அங்குனக்கென்ன வேலை.

கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?

தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.

சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.ஒருபுறத்தே மாடமாளிகளைகளில் கூட கோபுரங்களில்
ஆணவத்தினெக்காளிப்பு தாண்டவமாடிடுகையில்
மறுபுறத்திலோ
காடுகளிலும் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
'மரணத்துள் வாழு'மொரு நிலையிங்கேன்?

கற்பனைப் பெண்ணே! அடீ கற்பனைப்பெண்ணே!
நிஜங்களின் தரிசனம் உனக்குக் கிடைத்ததா?

ஏழ்மையிலவை தூங்கிக் கிடக்கின்றனவே. உனக்குத்
தெரிந்ததா?

புரிந்து கொண்டால் அறிந்து தெரிந்து கொண்டால்.. வாடி! வா!

இக்கவிதன் மடியில் நெஞ்சில் உனக்கு
நிறையவே இட

No comments:

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 2) - வ.ந.கிரிதரன் -

[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 -...