Saturday, January 15, 2022

வ.ந.கிரிதரனின் நேரம்: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் வெளி , நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிக் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம்


வ.ந.கிரிதரனின் நேரம்: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் வெளி , நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிக் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம். அவை பற்றி நான் எனது 'வ.ந.கிரிதரனின் நேரம்' யு டியூப் சானலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளிகள் வருமாறு;

 1. வெளி, நேரம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள்! பகுதி ஒன்று. - https://www.youtube.com/watch?v=8mPlpoOiCm4 

2 பகுதி இரண்டு. ஈர்ப்பு விசை பற்றிய பொதுச் சார்பியற் கோட்பாடுகள் (The General Theory of Relativity)  - https://www.youtube.com/watch?v=FOd6KFhx8Bg

ngiri2704@rogers.com

Tuesday, January 11, 2022

வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்'நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு!


இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத்தடுப்பு முகாம் வாழ்வனுபவங்களை சிறு நாவலான 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல், 'குடிவரவாளன்' , சுமார் ஒரு வருட காலம் நியூயோர்க் மாநகரத்தில் இருப்புக்காக அலைந்து திரிந்த அவனது வாழ்வை விபரிக்கின்றது.

Monday, January 10, 2022

பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -

- பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -
(பதிவுகள்.காம்) அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது.
தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.
மின்னூலினை வாங்க:

(பதிவுகள்.காம்) அஞ்சலி: எழுத்தாளர் கோவி மணிசேகரன் மறைவு! - வ.ந.கிரிதரன்


இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி.
தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) வெளிவந்துள்ளது.



எனது கட்டுரைகளின் தொகுதி , வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் (தொகுதி ஒன்று), தற்போது அமேசன்& கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது ஒரு பதிவுகள்.காம் வெளியீடு . இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

"எழுபதுகளில் யாழ் நகரத்துத் திரையரங்குகளும், 'கட் அவுட்டு'களும்" - வ.ந.கிரிதரன் -


நண்பர்களே! "எழுபதுகளில் யாழ் நகரத்துத் திரையரங்குகளும், 'கட் அவுட்டு'களும்" காணொளி எனது வ.ந.கிரிதரனின் நேரம் 'சானலு'க்குப் பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. காணொளியைப் பாருங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

'வ.ந.கிரிதரனின் நேரம்' (யு டியூப் காணொளி)





எனது ,வ.ந.கிரிதரனின், 'அமெரிக்கா' நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு. தாயகம் (கனடா) பத்திரிகையில் தொண்ணூறுகளில் வெளியான நாவல் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) இணைந்து வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ள நாவல் (1996). அண்மையில் இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாக (2019) வெளியானது.

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்