Friday, May 30, 2025

அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.


எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
 
ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் எழுதியவர் அதை நிறுத்தி விட்டுத் தன் தாய்மொழியில் எழுத ஆரம்பித்தவர். காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதுவதில் காலனித்துவச் சிந்தனைகளும், அடையாளங்களும், மரபுக் கூறுகளும் உள்ளடங்கி இருக்கும் என்று நம்பியவர். காலனித்துவ ஆதிக்கம் காலனித்துவாதிகளின் மொழிகளை முக்கியப்படுத்துவதாகக் கருதினார். அதனால்தான் தாய்மொழிகளில் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அவை வேண்டுமானால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம் என்று கருதியவர். 
 
நாவல் ,நாடகம், கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. பேராசிரியரான இவர் வாழ்க்கை நிறைவானது. கொண்டாடப்பட வேண்டுயது.
 
கூகி வா தியாங்கோ  நினைவாக அவரது நேர்காணலொன்றுக்கான யு டியூப் காணொளியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
 
Talk Africa: A Conversation with Ngugi Wa Thiong’o - https://www.youtube.com/watch?v=kao7D04M1sA

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்