தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை'
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் முக்கிய நாவல்களிலொன்று 'காலங்கள் சாவதில்லை'. மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்று.
வீரகேசரி பிரசுரமாக வெளியான இந்நாவலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/965/96468/96468.pdf
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'!
தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று. குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் ஆரம்பக் காலத்தை மையமாகக் கொண்டது. கனவுகள், ஏக்கங்களுடன் நல் வாழ்வுக்காகத் தமிழகத்திலிருந்து மலையகம் கொண்டு வரப்பட்ட மக்களின் இருத்தலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்.
எனக்கு இந்நாவலை வாசிக்கையில் தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'தோட்டி மகன்' நாவல் நினைவுக்கு வந்தது. அதில் மூன்று தலைமுறைகளை மையமாகக் கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை விபரித்திருப்பார் தகழி. அவ்விதமாகவே இந்நாவலும் பின்னப்பட்டுள்ளது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
சிதைந்திருந்த அட்டைப்படம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் சிறிது மெருகூட்டப்பட்டுள்ளது.
நாவலை வாசிக்க - https://noolaham.net/project/1090/108981/108981.pdf
.png)
.png)
No comments:
Post a Comment