Tuesday, February 10, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.
Monday, February 9, 2026
வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!
கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும்.
காதல் நதியெனப் பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.
Sunday, February 8, 2026
வ.ந.கிரிதரன் பாடல்கள் யு டியூப் சானல்! வரவேற்கின்றோம்!
நண்பர்களே! 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் எனது 'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவை (AI) நாம் அனைவரும் ,பல் துறையில் இருப்பவர்களும், பொது மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தச் 'சானல்'.
எனக்கு என் பாடல்களை இசையமைத்துப் பாடுவதைப் பார்க்க விருப்பமாகவிருந்தது. அதைச் சாத்தியமாக்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் துணை இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்? நான் ஓர் இசைக்குழுவின் உதவியை, பாடகர் உட்பட, நாடியிருக்க வேண்டும். அது மிகவும் இலகுவானதொன்றல்ல. அது பெரும்பொருட்செலவை வேண்டி நிற்பது. இவ்விதமானதொரு சூழலில்தான் எனக்கு செயற்கை நுண்ணறிவு உதவிக்கு வந்தது.
Monday, February 2, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத் தமிழரென்றே பொங்கி எழுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
Sunday, February 1, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத் தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல் கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம் காலக் கடமையல்லவா!
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்!
ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்) நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' . மரத்தால் ஆன அழகான 'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள 'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின் ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட் பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"
கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா!
ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்' 'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா. 'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.
இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அது அவசியமானதும் கூட. இதுவரை இவரது இந்தச் சானலைப் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் அதைப் பாராட்டுங்கள். அதைச் 'சப்ஸ்கிரைப்' ( Subscribe) செய்யுங்கள். எவ்விதப் பணமும் கொடுக்கத்தேவையில்லை. இவ்விதம் செய்வதன் மூலம் கிருபா கந்தையா அவர்களின் உழைப்பை, ஆரோக்கியமான பணியை நீங்களும் அங்கீகரிக்கின்றீர்கள்.
Subscribe to:
Posts (Atom)
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
