Friday, October 11, 2019

சேகுவேரா! - வ.ந.கிரிதரன் -


மானுட விடுதலைக்காகத்
தன்னுயிர் தந்த
மாவீரன்.
மறைந்தும் இவன் புகழ்
இன்னும்
மங்கவில்லை மானுடர்தம்
மனங்களில்.

மரணப்படுக்கையிலும் இவன்
மனவுறுதி மலைக்க வைப்பது.
இவன் சிந்தனைகள்,
இவன் எழுத்துகள்
இவன் வாழ்வு
போர் சூழ்ந்த உலகில்
படிக்க வேண்டிய பாடப்
புத்தகங்கள்.

என்னே மனிதனிவன்
என்றே எப்போதும் மானுடர்
இவன் புகழ் பாடி நிற்பர்.
மாவீரனே! மாமேதையே!
மகத்தான மானுடனே!
நீ வாழ்க! நின் புகழ் வாழ்க!

No comments:

வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5

வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.  வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி இயற...