In that
instant, he became a unique and mysterious figure. Intrigued, I decided
to engage in a short conversation with him. I noticed he carried a
plastic container with 'Clarke for Mayor' written on its surface.
Surprisingly, he shared that he was running for Toronto Mayor. He also
told me that he was running to champion people's rights. His revelation
astonished me, given the media's portrayal of homeless individuals often
dealing with mental illness.To read the full article
Saturday, January 20, 2024
மறக்க முடியாத கனடிய அனுபவம்!
ஒரு தடவை தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில் ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் அக்கதை பிரசுரமானது. பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும், Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.
அண்மையில் விக்கிபீடியாவில் அவரைப்பற்றியொரு பக்கமிருந்ததை அறிந்தேன்.அதில் அவரைப்பற்றிய பல முக்கிய தகவல்கள் இருந்தன. அவர் எண்பதுகளில் டொரோண்டோ பாடசாலையொன்றில் தரம் ஐந்துக்கான ஆசிரியராகவிருந்தவர். அதன் பின்பு வாகனம் சம்பந்தமான வர்த்தம் செய்தவர். நடிகராகவும் இருந்திருக்கின்றார். இவர் The People's Political Party அதாவது மக்களின் அரசியல் கட்சி என்னுமொரு அரசியல் கட்சியின் ஸ்தாபகர். தலைவர். மேயர் தேர்தலுடன் மாகாண தேர்தல்களிலும் போட்டியிட்டவர்.
எனது 'வீடற்றவன்' சிறுகதையின் முடிவில் இவ்வாறு கூறியிருப்பேன்: " இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது. ' உண்மைதான் கெவின் கிளார்க் ஒரு புதிரான மனிதர்தான்.
எனது இந்த அனுபவத்தைப்பற்றியொரு குறிப்பினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதினேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.
One
night in the mid-nineties, I was walking along Richmond Street West
towards University Avenue. As I passed the Hilton Hotel, I encountered a
panhandler. He stood out from the regular panhandlers, wearing a
worn-out coat and pants – a rich-to-rag figure. Politely, he asked for
money, and I gave him a toonie, a Canadian two-dollar coin. Grateful, he
handed me two quarters and suggested I give them to my daughter,
assuring me she could use them to call me when needed.
Let me know your answer, Kannamma! (Kannamma poem 4)
எனது ஆங்கில வலைப்பதிவுப் பக்கத்தில் புதிதாக எழுதிய 'கண்ணம்மாக் கவிதை' இது. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Let me know your answer, Kannamma! (Kannamma poem 4)
Kannamma, our space-time exists
Yes! An electromagnetic wave cone.
Inside the cone, we dance with dreams.
We dance with plans.
We dance with thoughts.
We dance with feelings.
The reality outside the cone,
that is unknown to us, Kannamma!
Is it similar to our space-time or not?
Have you ever thought about this, Kannamma?
Tell me, Kannamma.
Happiness is derived from thinking
about and beyond that border
or barrier, Kannamma!
To read the full poem
Ursula Andress in Undress! A movie ad I never forget!
எமது இளமைப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த ஹொலிவூட் நடிகர் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி ( நாம் அழைப்பது சீன் கானரி
இவரைப்பற்றிய, இவரது திரைப்படமான 'டொக்டர் நோ' யாழ் ராஜா திரையரங்கில் மீளத்திரையிடப்பட்டபோது பார்த்த அனுபவம் பற்றி, அவர்களது சுவையான திரைப்பட விளம்பரம் பற்றி ஒரு சிறு குறிப்பினை எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். To read the full article
Lee van Cleef: The Best of The Bad!
எனது ஆங்கில வலைப்பதிவில் நடிகர் லீ வான் கிளிவ் பற்றி Lee van Cleef: The Best of The Bad! என்னும் தலைப்பில் எழுதிய குறிப்பினை எனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
To read the full article
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி.....
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது ஒரு திறனாய்வுக் கட்டுரையல்ல. நினைவில் இருந்த விடயங்களை வைத்து எழுதப்பட்ட அறிமுகக் குறிப்பு மட்டுமே. இதில் உதாரணத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்கள் முழுமையானவை அல்ல. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.
On Canadian Tamil Literature!
Diaspora Tamil literature is a common term denoting the literature of expatriate Tamils. Tamil people live worldwide in many countries, including Western countries. Most of them migrated to other countries after the communal riots that happened in 1983, which is generally known as 'Black July '83.' Now, more than thirty years have passed since they left. During this time, the diaspora literature of Tamils has achieved many milestones in various literary forms such as short stories, poems, dramas, novels, and non-fiction. To read the full article
நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...
தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவரைப்பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் ஒரு சிறு குறிப்பினை இட்டுள்ளேன். அதன எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
On the memory of Kirk Douglas...
When Kirk Douglas passed away, he was 103 years old. He led a complete, satisfactory life. Despite being nominated thrice for the Oscar award, he never received it for his acting prowess.The denied Oscar award was given to his son, Michael Douglas, for his role in Oliver Stone's 'Wall Street'. Late in his life, he was awarded a lifetime achievement Oscar. To Read the full article
Tuesday, January 16, 2024
'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்!
இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத் தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




