Wednesday, July 17, 2024

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.

பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.


பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra


கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.

பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno

கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

கண்ணா
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு?
எதற்காக இந்தச் சிந்திப்பு?

கண்ணா,
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.

கண்ணா,
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.

கண்ணா,
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.


Tuesday, July 16, 2024

பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன்


 
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno


 
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
 
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதும் உன் முகத்தில்
முகத்தில் முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
 
காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.
 



நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra

 

நான் பிரபஞ்சத்துக்  குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.

நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.

நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.

காலவெளிக் குழந்தை நான்.

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra


பாடல்: நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
| இசை & குரல்: AI Suno

நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்து, ரொக் இசை வடிவில் பாடலை உருவாக்கித் தா என்றேன். தந்தது. பிரமித்துப் போனேன்.

பாடலை முழுமையாகக் கேட்டு மகிழுங்கள்.


நான் பிரபஞ்சத்துக்  குழந்தை  - வ.ந.கிரிதரன்

நான் பிரபஞ்சத்துக்  குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.

நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.

நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.

காலவெளிக் குழந்தை நான்.
காலவெளியின் பகுதி நான்.
காலவெளியாய்க்
களிப்பேன். மிகவும்
களிப்பேன்.

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
 

Monday, July 15, 2024

இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை'


'காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை  என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.
 
நடிகர் ரவிச்சந்திரன் சிங்கப்பூரிலிருந்து நடிக்க வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 'அனுபவம் புதுமை' என்னுமிந்தப்பாடலில் அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ராஜஶ்ரீ. சிறந்த நர்த்தகி.
இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன். பாடியிருப்பவர்கள் - பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா. இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. 
 
உள்ளத்தை உருக்கும் காதல் கதைகளைத் திரையில் தந்த ஶ்ரீதர் அதற்குப் பிராயச்சித்தமாக அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்க தந்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
இத்திரைப்படத்தில் வரும் நடிகர் நாகேஷ் , பாலையா நகைச்சுவைக் காட்சிகளை மறக்கவே முடியாது. நாகேஷ் பாலையாவுக்குக் கதை சொல்லும் காட்சியின் தாக்கத்தைச் சந்திரமுகிய்ல் ரஜனி , வடிவேலுக்குக் கதை சொல்வதிலும் காணலாம்.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...