Tuesday, July 16, 2024

பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன்


 
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno


 
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
 
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதும் உன் முகத்தில்
முகத்தில் முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
 
காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.
 



No comments:

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்