Friday, July 12, 2024

கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -


இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
 
காணாமல் போன தன் போராளிக் கணவனை அல்லது காதலனை நினைத்து வாடுமொரு பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. காணாமல் போனவன் பகைவனுடன் மோதி போர்க்களத்தில் மாய்ந்தானோ அல்லது உட்பகையால், உடல் நலிவால் , இராணுவ முகாமில் மறைந்தானோ என்று விடை தெரியா வினாக்களுடன் துயரில் ஆழ்ந்திருக்கின்றாள் அவள்.
இக்கவிதை ஒரு விதத்தில் அக்காலகட்ட நிகழ்வுகளை, வேதனையினை ஆவணப்படுத்துக்கின்றது என்றும் கூறலாம்.
 
எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -
 
அன்றொரு நாள் பின்னிரவில்
ஆயுதம்தனை ஏந்திப் போனவர்
என்னவர்தான். போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே மேலென்று
போனவரை
யாரேனும் பார்த்தீரோ?
பகைவன் தன் போர்க்களத்தே
போனாரோ? அன்றி
'பூசா'வில்தான் புதைந்தாரொ?
உட்பகையால் உதிர்ந்தாரோ?
உடல்படுத்தே மடிந்தாரோ?
போனவரை யாரேனும் பார்த்துவிட்டால்
சொல்வீரா?
அன்னவரை எண்ணியெண்ணி
அகமுடையாள் இருப்பதாக்.
மன்னவரின் நினைவாக
மங்கையிவள் வாழ்வதாக.

No comments:

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!

முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவி...