Thursday, July 18, 2024

கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்

கவிதை; கறுப்பு ஜூலை  - வ.ந.கிரிதரன்


                                                          - இசை & குரல்: AI SUMO -

கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டே நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.

கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.

அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.

சொந்தமண்ணில் அகதியானேன்.
சொந்த மண்ணில் அகதியானேன்.

பிறந்த மண்ணில் அகதியானேன்.
பிறந்த மண்ணில் அகதியானேன்.

புகலிடம் நாடிப் புறப்பட்டேன்.
புகுந்த மண்ணில் அகதியாக.

சிறைகளில் செந்நீர் வடிந்தது.
சிறைகளும் கசாப்புக் கடைகள் ஆகின.

போரொன்று வெடித்தது.
பெரு நாசம் விளைந்தது.

கறுப்பு ஜூலை பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை வரலாற்றின் களங்கம்.

கறுப்பு ஜுலைகள் இனியும் வேண்டாம்.
கறுப்பு ஜூலைகள் இனியும் வேண்டாம்.

கறுப்பு ஜூலையே போ.
கறுப்பு ஜூலையே போ.
கறுப்பு ஜூலையே போ.

No comments:

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்