Monday, July 29, 2024

கார்ல் மார்க்ஸ் - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=CVBQ50q7zLE


சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.

ஏழ்மை இவன் தன்
எண்ணங்களை என்றுமே
சிதைத்திட இவன்
சிறிதும் இடம் கொடுத்ததில்லை.

முயற்சி ஊக்கத்தை
மூலதனம் ஆக்கினான்.
மூலதனம் படைத்தான்.
மூலதனம் படைத்தான்.

நேற்றைய மாற்றங்களை
எதிர்வு கூறியவன்.
இன்றைய மாற்றங்களை
இட்டு எச்சரிக்கை செய்தவன்.

உண்மைகளை நம்
மண்ணுலகின் நீண்ட பாதையிலே
மக்கள் மீண்டுமொரு தடவை
அறிந்து கொள்வர்.

சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.



No comments:

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

அமரர் ஈழநாதன்  எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும...