'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, July 9, 2024
ஓவியம் பேசினால்...
நியூயோர்க் மாநகரத்து வீதி ஓவியர் எண்பதுகளில் என்னைப்பார்த்து வரைந்த ஓவியம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவமொன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவு இது.
எழுத்தாளர் மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில் வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), எம் பால்ய பருவத்தில் இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்தது. அதனால் அவ்வாசிப்பனுபவம் இன்றும் எம் நினைவுகளில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கிறது,மாயாவியின் நாவல்கள் பல கல்கியில் வெளியாகியுள்ளன. ராணிமுத்துப் பிரசுரமாக வாடாமலர் நாவல் வெளியாகியுள்ளது. ஆனால் எம்மைப்பொறுத்தவரையில் அவரது மிகச்சிறந்த படைப்பாக இந்த மொழிபெயர்ப்பு நாவலையே கூறுவோம். அவ்வளவுக்கு அப்பருவத்தில் விரும்பி வாசித்தோம்.
Subscribe to:
Post Comments (Atom)
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment