Tuesday, July 30, 2024

ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20

ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?

ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

 

யாழ்இந்து மாணவர்கள் இணைந்து
வாழ்நாட பயன் கருதி
உருவாக்கிய திட்டம் ஓராயம்.
எழுபதுகளில் படித்தவர்கள் சிலர்
எண்ணங்களில் உருவான திட்டம்.

இளையவர் தொழில்நுட்பக் கல்வி,
இணைய வழிக் கல்வி
சூழலைப் பேணும் விவசாயம்
சுகவாழ்வு முதியோர் சுகவாழ்வு
நீர்வளம் பேணல்,பாதுகாத்தல்
கழிவின் மீளப் பாவிப்பு என
ஊர்நலம் நாடி உருவான திட்டம்
உயர்ந்த நல்லதோர் திட்டம் ஓராயம்

ஓராயிரம் அமைப்புகள் இருப்பினும்
ஓராயம் போல் வருமா?
ஓராயம் போல் வருமா? இங்கு
ஓராயம் போல் வருமா?

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

ஓராயம் திட்டம் மேலும்
ஒளிரட்டும், ஒளிரட்டும். ஒளிரட்டும்.
ஒளிமயமான ஓர் எதிர்காலம்
ஒளிர மிளிரட்டும் ஓராயம்.



No comments:

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்