Friday, July 23, 2021

கவிதை: மகா புலவரும் மகா கவிஞரும்! - வ.ந.கிரிதரன்


மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை. 
 சிந்தித்துப் பொருத்தமான சொற்களை
அவர் தேர்ந்தெடுப்பது
அவற்றின் வாசகரைக் கவர மட்டுமே.
அவை அவரின் இதயத்தின்
ஆழ்ஊற்றென்றால்
அவற்றுக்கு நான் அடிமை.
ஆனால் அவரிதயத்தில்
அவ்விதம் ஊற்றுகள் ஊறுவதில்லை.
ஆழ் உணர்வுகளை அவர் சொற்கள்
வெளிப்படுத்துவதில்லை.
அதனால் அவை கவிதைகள்
அல்ல. 
 
ஆழமனத்தின், அக உணர்வின்
வெளிப்பாடு கவிதை.
புறமனத்தின் புத்தியின்
வெளிப்பாடு புலமை.
அவர் மகாகவிஞரல்லர். ஆனால்
மகா புலவர்.
கவிதைகளை இரசிக்க முடிந்த என்னால்
புலவர்களின் புத்திச் செருக்குகளை இரசிக்க
முடிந்ததில்லை; முடிவதில்லை.

No comments:

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்