https://www.youtube.com/watch?v=cklW1BKPgeQ
'சம்சாரம்' திரைப்படம் 1950ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படம். ஜெமினி தயாரிப்பான இத்திரைபடத்தின் இயக்குநர்களிலொருவர் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன். அடுத்தவர் சந்துரு. இத்திரைப்படத்தின் இசை - ஈமணி சுந்தர சாஸ்திரி. பாடல்களை எழுதியவர் : கொத்தமங்கலம் சுப்பு.
இத்திரைப்படத்தில் வரும் 'கட கட லொட லொட வண்டி' மிகவும் புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப்பாடல்களிலொன்று. இப்பாடலைப்பாடியிருப்பவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி.
Thursday, January 29, 2026
காலத்தால் அழியாத கானம்: 'கட கட லொட லொட வண்டி'
Wednesday, January 28, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
எண்ணங்கள் இல்லையென்றால் என்ன உண்டு?
எண்ணங்கள் எம்மை வழிநடத்தும் பாதைகள்.
எண்ணங்களை மீறி ஒன்றும் இல்லையா புறத்தே.
எண்ணங்களே எம் வாழ்வின் ஆதாரங்கள்.
நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.
Tuesday, January 27, 2026
" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர். நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன். ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர் பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும் பாடல் மூலம்தான்.
எழுத்தாளர்களின் கவனத்துக்கு - இணையத்தின் வலிமை!
எனது 'குடிவரவாளன்' நாவலின், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பு An Immigrant . இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். என் கூகுள் தேடலொன்றில் அண்மையில் இந்நாவல் பற்றிக் கிடைத்த தகவலிது: தமிழகத்தைச் சேர்ந்த , உதவிப் பேராசிரியராகப் பணி புரியும் முனைவர் பி.முத்துலக்சுமி இந்நாவல் பற்றி ஆங்கிலத் திறனாய்வொன்றினைச் சர்வதேச இலக்கியக் கருத்தரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். அவ்வாய்வுக் கட்டுரையின் தலைப்பு - 'Ethnic Conflict in V.N. Giritharan’s An Immigrant,'
ஏற்கனவே முனைவர் தாரணி அகில் இந்நாவல் பற்றி ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் இரண்டினை எழுதியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய விபரங்கள் வருமாறு:
Sunday, January 25, 2026
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டமும் , தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகளும்! - வ.ந.கிரிதரன் -
அண்மைக்காலமாக ஊடகங்களில் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிய முழுமையான அறிக்கையினை இன்னும் நான் பார்க்கவில்லை. இத்திட்டம் பற்றிய விரிவான வரைபடங்களுடன் கூடிய அறிக்கை இணையத்தில் இருந்தால் அறியத்தாருங்கள்.
இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்கள் எவையுமில்லாமல் என்னால் உறுதியான கருத்துகள் எவற்றையும் தற்போது வைக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். வவுனியாவின் எல்லைப்பகுதிகளில் குறிப்பாக மருதோடை , காஞ்சிரமோடை பகுதிகள் பல தமிழர்தம் சரித்திர முக்கியத்துவம் மிக்கவை. குறிப்பாகக் காஞ்சிரமோடை பற்றியொரு கட்டுரையினை நான் எழுநா சஞ்சிகையிலும் எழுதியுள்ளேன். அதனை இப்பதிவின் கீழ் தந்திருக்கின்றேன்.
இவ்விதமான சரித்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதுவரையில் போதிய ஆய்வுகள் இவை பற்றிச் செய்திருக்கின்றார்களா என்பதும் சரியாகத்தெரியவில்லை. இவ்விதமான பகுதிகளை இத்திட்டம் அழிக்கும் வகையில் அமைந்திருந்தால் இத்திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்களின் குடி பரம்பலை மாற்றி அமைக்காதிருந்தால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டால் , இத்திட்டம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருந்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்லதே.
காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'
'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன.
கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது. இதுவும் சிறப்பாகத்தானுள்ளது.
வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் கனடியப் பிரதமரின் உரை!
கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.https://www.youtube.com/watch?v=btqHDhO4h10
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால் இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI நெஞ்சு பொறுக்குதில்லை...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

