Sunday, October 13, 2024

வ.ந.கிரிதரனின் பாடல்கள்! (தொகுப்பு 2) - இன்று புதிதாய்ப் பிறந்தேன்'




எனது யு டியூப் சானலான 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் வெளியான பாடல்களின் இரண்டாவது தொகுதி 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்னும் தலைப்பில் , பதிவுகள்.காம் வெளியீடாக அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. -1. காதல் செய்வீர்! 6
2. காலையின் வருகை. 8
3. இயற்கையைப் பேணுவோம். 10
4. இணைந்து வாழ்வோம். 12
5. நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற    14
6. அலைந்து திரியும் அகதி மேகமே! 16
7. வெகுசன இலக்கியத்தின் தேவை! 18
8. சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்! 19
9. படைப்பின் சிறப்பு! 21
10.வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்    23
11. சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு. 25
12.. காதலை உணர வைத்தாய்! 27
13. காலவெளிப் பயணம். 28
14. கணந்தோறும் பிறப்போம். 30
15. பூவுலகின் குழந்தைகள் நாம்! 31
16. இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். 33
17 ஏணி பாம்பு விளையாட்டு    34
18. காட்சியும் சித்த விளையாட்டும்! 36
19. மனத்தை மயக்கும் இந்த நிலா! 37
20. சிந்திப்பீர் மானுடரே! 38
21. காலவெளி நாம்    39
22. என் பிரியம் மிகு யாழ் மண்ணே! 41
23. உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. 43
24. புதிய பாதையில் பயணம் தொடரட்டும். 44
25. சிந்திப்போம்! 45
26. அன்பே வாழ்வின் அடிப்படை! 46
27 விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்    48
28 மண்ணின் குழந்தைகள் நாம்! 49
29. இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்    51


என்னுரை!

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது. பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு

அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO

ஏற்கனவே வ.ந.கிரிதரன் பாடல்களின் தொகுதி 1 அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. இது அவ்வகையில் வெளியாகும் இரண்டாவது தொகுதி.


1. காதல் செய்வீர்!

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

உடல்நலம் சீர்செய்யும் அரு மருந்து.
உளநலம் சீர்செய்யும் மருந்தே காதல்.
உளநலம் சீரடைந்தால் நலமாகும் உடலுமே.
உயிர்வாழ உதவிடும் மருந்தே காதல்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

பூங்காக்கள் பூக்கள் சிரிக்கும் சொர்க்கம்.
பூக்கள் பூக்கும், நறுமணம் பரப்பும்.
காதல் மலர்கள் பூக்கும் நந்தவனம்
ககனத்தில் மானுடர் எம் வாழ்வும்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

மழைத்துளி தீண்டின் மெய் சிலிர்க்கும்.
மகிழ்வால் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.
காதல் துளி தீண்டின் சித்தம் சிலிர்க்கும்.
உண்மை அன்பில் தன்னலம் அருகும்..

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

காதல் செய்வீர் என்றான் மகாகவி.
காதல் மலர் கொய்வோம் நாம்.
காதல் மலர்கள் பூக்கும் பூங்காவென.
மாற்றிடுவோம் மண்ணுலகை நாம் எல்லோரும்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

2. காலையின் வருகை.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்கும்.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகும்.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

குருவிகள் வாழ்த்துப் பா இசைக்கும்.
குளங்களில் தாமரை இதழ் விரிக்கும்.
தண் கதிர் பரப்பும் கதிரின்
தண் அணைப்பில் உலகம் விழிக்கும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

இருள் நீங்கும் ஒளி பிறக்கும்
இருப்பில் இடர் நீங்கும். ஆம்!
இடர் நீங்கி களி பிறக்கும்.
இதுதான் காலை கூறும் அறிவுரை.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

வாழ்க்கையில் சவால் கண்டு தளராதீர்.
வளம் வரும்., நலம் மிகும்.
பகல் பிறப்பதும் அது போல்தான்.
பாரில் எங்கும் ஒளி பிறக்கும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

3. இயற்கையைப் பேணுவோம்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக் களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

உணர்வால் தாழ்ந்து கிடக்கும் சமயங்களில்
உற்சாகம் பெறுவதற்கு உதவுவது இயற்கை.
மனம் சோர்ந்து கிடக்கும் பொழுதுகளில்
மனச் சோர்வு அகற்றுவதும் இயற்கை.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

இன்பத்தை வாழ்வுக்கு வழங்குவது இயற்கை.
இருப்புக்கு அர்த்தம் தருவதும் இயற்கை.
இயற்கையைப் பேணுவது நமது கடமை.
இயற்கையைப் பேணுவோம், வளம் சேர்ப்போம்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

4. இணைந்து வாழ்வோம்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

மல்லிகை, முல்லை, தாமரை என
மலர்கள் இருப்பது மகிழ்வினைத் தரும்.
மா, முதிரை, பாலை என
மரங்கள் இருப்பதும் பயனைத் தரும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

மனிதர் பலர் வாழும் பூமி.
மனிதரின் ஒற்றுமை பூமியின் ஒற்றுமை.,
வேற்றுமையில் ஒற்றுமை நன்மை தரும்.
ஒற்றுமையாய் இருப்போம். வாழ்ந்து சிறப்போம்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

இனம், மதம், மொழி என
இருப்பதால் இங்கு நன்மையே உண்டு.
பல்லினம் இணைந்து பயணிப்பதால் உலகம்
பெருநன்மை அடையும். முன்னேற்றம் அடையும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

பிறப்பின் நியதி ஒற்றுமையின் நியதி.
சிறப்புற்று வாழ ஒற்றுமை கொள்வோம்.
இருக்கும் வரையில் இணைந்து வாழ்வோம்.
இருக்கும் இடர் நீக்கி வாழ்வோம்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

5. நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

முடிந்த போரின் அழிவுகள் இன்னும்
படிந்தே இருக்கும் அனைவர் நினைவினில்.
நடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
நல்லெண்ணம் வளர்த்திட நடவடிக்கை எடுப்போம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.
என்னும் நிலையினை ஏற்படுத்தவே வேண்டும்.
குற்றம் புரிந்தவர் எவராயினும் அவரைச்
சட்டத்தின் முன்னே நிறுத்தவே வேண்டும்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

காணமல் போனவர் நிலையினை காண்போம்.
கடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
அத்து மீறிய குடியேற்றத் திட்டங்களை
அடியோடு ஒழித்தல் மிகவும் அவசியம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

சார்பற்ற அரசு இல்லை என்றால்
யார் மனத்திலே நம்பிக்கை எழுந்திடும்.
ஊர் ஒன்றாக வேண்டும் என்றால்
சார்பற்ற அரசின் இருப்பு அவசியம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

வரலாற்றுத் தவறுகள் பாடங்கள் ஆகட்டும்.
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படவே வேண்டாம்.
நாட்டு மக்கள் அனைவரும் இணைந்திட
நல்லிணக்கம் தேவை என்பதை உணர்வோம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

6. அலைந்து திரியும் அகதி மேகமே!

நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

நாடு விட்டு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

அலைந்து திரியும் அகதி மேகமே.
அகத்தில் ஒருபோதும் நம்பிக்கை இழந்திடாதே.
நிலைகுலைந்து உன்வாழ்வு குலைந்திட விட்டிடாதே.
நிலைமாறும் என்னும் நம்பிக்கையை இழந்திடாதே.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

வரலாற்றில் நீதி அழிவதும் இல்லை.
அநீதி நிலைத்து நிற்பதும் இல்லை.
அதர்மம் அழிவது எப்போதும் நிச்சயம்.
தர்மம் வெல்வதும் அதுபோல் சத்தியம்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

7. வெகுசன இலக்கியத்தின் தேவை!

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

பாலர் பருவத்தில் பாலர் இலக்கியம்.
படிப்பது வளர்ச்சியின் தேவை அல்லவா.
அதன்பின் அம்புலிமாமாக கதைகள் படித்தோம்.
அதன்பின் வெகுசனப் படைப்புகளில் மூழ்கினோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

தீவிர வாசிப்பு நோக்கிய பயணத்தில்
தவிர்க்க முடியாதது வெகுசன இலக்கியம்.
கல்கி, அகிலன், சாண்டியல்யன், ஜெகசிற்பியன்
இவர்களின் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் இலக்கியம்.
வாசிப்பின் வளர்ச்சியை வளர்க்கும் இலக்கியம்.
வாசிப்பவர் எவரும் தவிர்த்திடா இலக்கியம்.
வெகுசன இலக்கியம் என்றே கூறுவோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

8. சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!

இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே இல்லை.

கறுப்பு ஜூலையில் தப்ப ஓடுகையில்
கண்ணில் தெரிகிறது அந்தச் சிட்டு.
ஓடும் என்னருகில் சிறகடிக்கும் சிட்டு.
விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் சிட்டு.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே இல்லை

உயிர் தப்ப ஓடும் மக்கள்
ஒன்றுமே அறியாது களிப்பில் சிட்டு.
அத்தருணத்தில் நினைத்தது நினைவில் உள்ளது.
'சிட்டுக்கு இருக்கும் சுதந்திரமற்ற நான்'

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே இல்லை

அத்தருணமும் அத்தகைய தருணங்களில் ஒன்றே.
எத்தனை காலம் சென்றாலும் சிதையாது.
சிந்தையில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.
அன்று உணர்ந்த அந்தத் தருணமும்.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே இல்லை

9. படைப்பின் சிறப்பு!

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

படைப்பில் குறைகள் பல.
படைத்தவரின் மென்பொருள் வழுக்கள்.
அடிப்படையில் உயிர்கள் அனைத்தும்
உருவாவது வடிவிலொத்த உயிரணுக்களில்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சின்விதை தளைக்கும் விழுதுவிடும்
பெருஆல் விருட்சமென புவியில்.
உயிர்கள் நிறைந்து கிடக்கும்.
பிரமிக்க வைக்கும் இவ்வுலகம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

அந்தரத்தில் புட்களின் வாழ்க்கை.
எந்தக் கணத்திலும் அழியலாம்.
இருந்தும் தப்பிப் பிழைக்கும்
உயிர்கள் படைப்பின் திறனல்லவா?

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சுற்றியிருக்கும் உலகை அறிவோம்.
சுற்றியிருக்கும் காலவெளி புரிவோம்.
கற்பதால் தெளிவு காண்போம்.
அற்புதமே இருப்பென வியப்போம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

10.வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்

வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

இருக்கும் வரையில் இன்பம் உறுவோம்.
பெருந்தடை எதிர்பட்டால் எதிர் கொள்வோம்.
ஓரமாக ஒதுங்கிப் போக மாட்டேன்.
எதிர்கொள்வேன். எதிர்நீச்சல் போட்டுச் செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

எம் இருப்பென்பது இங்கு ஒருவாழ்வு.
நம் இருப்பில் நன்மை உணர்வோம்.
கானல்கள் கண்டு கலங்குதல் இல்லை.
கானல் உணர்ந்து நடந்து செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

தளராத முயற்சி ஒன்றே அவசியம்.
வளர்ச்சிக்கு அதுவே திடமான அத்திவாரம்.
உளத்தில் இவ்வுண்மை உணர்ந்து செல்வேன்.
வளம்மிகு காலம் வரவேற்கும் நிச்சயம்.

வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

11. சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன் சிறகடிப்பில் உள்ளது
உன் படைப்பின் மகத்துவம்.
பறத்தல் என்பது சுலபமல்ல.
பறத்தல் என்பது தொழில்நுட்பம்.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

காற்றற்ற வெளியில் பறத்தல்
குறுஞ்சிட்டே உன்னால் முடியாது.
காற்றை வைத்தார் வெளியே..
கடுகிப் பறக்க வைத்தார் அதனூடே.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

சிறகினூடு விரையும் காற்று.
சிறகடித்துப் பறக்க வைக்கும்.
கிறங்க வைத்துப் பறக்கின்றாய்.
கூறுகின்றாய் இருப்பின் புதிரினை.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன்னுடலும் உனது செயலும்
சின்னஞ்சிறு சிட்டே இருப்பின்
புதிர் அவிழ்க்கும் கூறு.
பெருஞான வெளிப் பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

12.. காதலை உணர வைத்தாய்!

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய் உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பார்வையில் எவ்விதம் இவ்வித உணர்வுகள்
படம் விரித்தன. படைப்பின் அற்புதமே.
நெஞ்சின் ஆழத்தே சென்று உறைகின்றன.
வஞ்சியுன் வருகையால் இதை உணர்ந்தேன்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய் உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பொழுதெல்லாம் உனது நினைவால் நிறைந்தது.
எழுந்தால் , விழுந்தால் உன் நினைவே.
ஆழ உழுதாய் நெஞ்ச வயலை
ஆளுமையால் என்னைத் துடிக்க வைத்தாய்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய் உன்னை நினைத்தே சிறகடித்தேன்

காதலெனும் உணர்வினை உணர வைத்தாய்.
ஆதலினால் அன்பே இதயத்தில் குடியேறினாய்.
தனக்கென்று வாழா உள்ளம் உணர்த்தினாய்.
எனக்கிது போதும் என்பேன் அன்பே.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய் உன்னை நினைத்தே சிறகடித்தேன்

13. காலவெளிப் பயணம்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

இருப்பு போதாது தேடலுக்கு.
முற்றுப் பெறாத தேடல்
மேலும் தொடரும் வினாத்தேடி.
மானுட வாழ்வின் அர்த்தம்நாடி.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கும் இருப்புக்கு எனது நன்றி.
வந்து பிறந்தது தற்செயல் என்றாலும்
சிந்திக்க முடிந்தது பெரும் பாக்கியமே.
சிந்திப்பேன் இருப்பு இருக்கும் வரையில்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்..


14. கணந்தோறும் பிறப்போம்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள் கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

இருப்பும் இங்கு சார்பே உணர்வோம்.
இங்குஎம் இருப்பும் இதுபோல் துளியே,
இதற்குள் கூடிப்பெருகி கும்மாளம் அடிப்போம்.
இதைநாம் புரிந்துவிடின் இன்பமே நிலைக்கும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

காலத்தூடு விரையும் இருப்பில் கணந்தோறும்
கலங்கள் பிறக்கும். நாமும் பிறப்போம்.
கணந்தோறும் பிறக்கும் இருப்பை அறிவோம்.
களிப்பில் பொழுதை நிறைத்துத் தொடர்வோம்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.


15. பூவுலகின் குழந்தைகள் நாம்!

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

பிரிவினைகள் அற்ற வாழ்வே இன்பம்.
எரியும் உலகை இல்லாது ஒழிப்போம்.
புரிந்து கொண்டே பய    ணம் தொடர்வோம்.
தெரிந்து கொள்வோம் பிறப்பின் பயனை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

வாயுக் குமிழியென வெளியில் விரையும்
ஓயுதல் அற்ற இயக்கத்தில் பூமி.
இருப்பதை உணர்ந்தால் மோதல் இல்லை.
விருப்புடன் வாழ்வை அணுகுவோம் உண்மை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

அன்பு மலரால் நிறைந்த பூங்கா
என்றே உலகை மாற்றி வைப்போம்.
தின்று இன்புற்று இருப்பதுடன் வாழ்க்கை
நின்று விடுவதில்லை என்பதைப் புரிவோம்.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

இனம், மதம், மொழிப் பிரிவுகள்
சனத்தின் மத்தியில் தேவையே இல்லை.
அனைவரும் ஓரினம் என்னும் உண்மையை
நினைவில் வைத்தே இருப்பைத் தொடர்வோம்.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

16. இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

ஒழுங்குள்ள வாழ்வில் இன்பம் உண்டு.
ஒழுங்குதனை என்வாழ்வில் ஒழுகிட அருள்வாய்.
இயற்கைத்தாயே உனை இறைச்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

இருப்பறிந்து இருப்பை நகர்த்தும் போக்குதனை
இவனுக்கு அருளிடு. அதுபோதும்.அதுபோதும்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

உயிர்நேயம் மிக்கவனாய் உலகில் வாழ்ந்திடும்
பக்குவம் வளர்த்திடு. பரிணாமம் வழங்கிடு.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

17 ஏணி பாம்பு விளையாட்டு

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

ஏறுவதும் இறங்குவதும் மீண்டும் ஏறுவதும்
எல்லாமே சகஜம் நம்வாழ்விலும் புரிந்துகொள்.
ஏறினால் பெருமிதத்தில் ஆழ்ந்து விடாதே.
இறங்கினால் இடிந்துபோய் இருந்து விடாதே.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

ஏற்றமும் இறக்கமும் முரண்பாடுகள் தெரியுமா?
மூச்சிழுத்தலும், வெளியேற்றலும் முரண்பாடுகள் புரியுமா?
முரண்பாடுகள் அற்ற வாழ்வென்று ஒன்றில்லை.
முரண்பாடுகளே இருப்பின் அடிப்படை என்றறிவாய்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

இன்பமும், துன்பமும் இல்லா வாழ்வில்லை.
உறவும் , பிரிவும் இல்லாக் காதலுண்டா?
ஊடலும் ,கூடலும் அற்ற குடும்பம் ஏது?
பிறப்பும், இறப்பும் இவையும் அதுபோல்தான்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

முரண்பாடுகள் நியதி என்பதை ஏற்போம்.
முரண்பாடற்ற வாழ்வு இல்லை அறிவோம்.
முரண்களுக்குள் இணக்கம் காண்பது சரியாகும்.
முரண்களுடன் வாழ்வை ஏற்றுச் செல்வோம்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

18. காட்சியும் சித்த விளையாட்டும்!

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

நாம் காண்பதாக உணர்வது என்பதெல்லாம்
நம் மூளையின் மின்சமிக்ஞை என்றால்
வெளியில் இருப்பதாக எண்ணுவது எல்லாம்
உள்ளத்தின் மாயத் தோற்றங்கள் தானா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

வெளியில் விரிந்திருக்கும் காட்சி எல்லாம்
வெறும் சித்தத்தின் சித்து விளையாட்டா?
உண்மை என்றொன்று ஒன்று உண்டா?
உண்மையும் பொய்மையும் நாணயத்தின் பக்கங்களா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
சித்தம் வரைந்த சித்திரமா இவையெல்லாம்.
சித்தம் மீறிடும் சாத்தியம் உண்டா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

19. மனத்தை மயக்கும் இந்த நிலா!

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

காதலுக்குத் தூது செல்லும் இந்தநிலா.
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தநிலா.
சிந்தையைக் கொள்ளை கொள்ளும் இந்தநிலா.
எம்முன்னோர் களித்துக் கிடந்த இந்தநிலா.

உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

20. சிந்திப்பாய் மானுடா!

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

கேட்பவற்றை அப்படியே நம்பாதே.
காண்பவற்றையும் அப்படியே நம்பாதே.
கேட்பவை, காண்பவை அனைத்தையுமே
கவனத்தில் எடுத்தே சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

மந்தையாக மாறிக் கிடக்காதே.
மனத்தில் இருத்தி சிந்திப்பாய்.
விந்தைமிகு இருப்பின் அர்த்தம்
விளங்கிக் கொள்ளச் சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

சிந்தனை என்பது நியூரோன்களின்
செயற்பாடு என்றுரைக்கும் அறிவியல்.
நியூரோன்களின் நாட்டியமே பிரபஞ்சம்
நினைவுகளின் விளையாட்டா பிரபஞ்சமும்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

21. காலவெளி நாம்

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.

விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

22. என் பிரியம் மிகு யாழ் மண்ணே!

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.

தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.

யாழ்ப்பாணம் என்றால் யாழ்தேவி நினைவுவரும்.
யாழ்ப்பாணம் என்றால் யாழ்கூழ் நினைவுவரும்.
கிடுகுவேலி நினைவுவரும். கிட்டிப்புள் நினைவுவரும்.
கமுகு ,தென்னை, பனை நினைவுவரும்.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.

திரிந்த பொழுதுகள் களித்த தியேட்டர்கள்
சுகித்த உணவகங்கள் அருந்திய பானங்கள்
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.


23. உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர் வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறியாது இருக்கின்றோம்.
மண்ணின் வரலாற்றை எழுதுபவர் மக்களே.
உண்மை வரலாறு அதுவே உணர்வோம்.
உணர்ந்து அவரை எப்போதும் போற்றுவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் சக்திகள் உறவே இங்கு
உண்மை வரலாற்றை உருவாக்கி வைக்கும்.
மானுட சமுதாய அமைப்புகளை உருவாக்கும்.
மாடாய், உழைப்பவரே வரலாற்றைத் தீர்மானிப்பர்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மைதனை நாம் அறிவது அவசியம்.
உணர்ந்து உழைப்பவரை நாம் போற்றுவோம்.

24. புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத் தொடர்வோம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

வறுமையில் மக்கள் வாழும் நிலையினை
அறுத்து எறிவோம். திட்டங்கள் தீட்டுவோம்.
அறிவை அனைவரும் பெறவே நாம்
அனைவரும் உழைப்போம். உறுதி எடுப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

25. சிந்திப்போம்!

சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.

சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

இருப்பு இருக்கும் அண்டம் பற்றி
விருப்புடன் சிந்திப்பேன் சலிப்பு அற்று.
சிந்திப்பது போலோர் இன்பம் உண்டோ!
செகத்தில் சிந்திப்பது தான் பேரின்பம்.

சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

சிந்திப்போம் இங்குநாம் உள்ள வரையில்.
சிந்திப்பதால் தெளிவு பிறக்கும் மேலும்
சிந்திப்பதால் அறிவு பெருகும் எனவே
சிந்திப்போம் இருக்கும் வரையில் நாமே.

சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

26. அன்பே வாழ்வின் அடிப்படை!

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாடுவோம். இன்பம் அடைவோம்.

உயிர்கள் இருப்பது அன்பின் வலிமையால்.
உணர்ந்து கொண்டால் இன்பமே இருப்பில்.
உணராது போனால் விளைவதே மோதல்.
உலகில் தினமும் பார்க்கின்றோம் இதனைத்தான்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாடுவோம். இன்பம் அடைவோம்.

உழைத்து, உண்டு , உறங்கி அன்பில்
திளைத்தால் அதுபோல் இன்பம் உண்டோ/
உணராது இருக்கின்றோம் ஏனோ புரியவில்லை.
உணர்ந்து வாழ்வோம் உலகை வெல்வோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாடுவோம். இன்பம் அடைவோம்.

கணியன் பூங்குன்றனார் அன்று சொன்னான்
யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்து போயின.
ஆயினும் இன்னும் உணராது வாழ்கின்றோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாடுவோம். இன்பம் அடைவோம்.

அன்பு கொண்டே அகிலத்தில் வாழுவோம்.
அன்பே வாழ்வின் அச்சாணி உணருவோம்.
அன்புக் குளத்தில் மூழ்கி எழுவோம்.
அன்புக் கடலில் பயணம் செய்வோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாடுவோம். இன்பம் அடைவோம்.

27 விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
துளியென எம்இருப்பு இருப்பதுன் எதனால்?
தொலைவுகள் பிரிக்கும் பெரு வெளியில்
அலையும் உயிரினம் இதுவரை அறியோம்.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

நெடுந்தொலைவு வெல்வது சாத்தியமா இல்லையா/
நம்வாழ்வில் வெற்றி கிட்டுமா அறியோம்.
உயிர்கள் வேறு அற்ற அண்டமா?
உண்மையை அறிதல் இலகு அல்ல.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

விடை காணத் தடை பெருந்தொலைவு.
வேகத்தின் அதிகரிப்பு காலத்தை மீறல்
அடைவதே ஒரேவழி ஆனால் அதனை
அடைவது எப்படி அதுதான் கேள்வி.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

28 மண்ணின் குழந்தைகள் நாம்!

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

வெறுமைக்குள் விரையும் வாயுக் குமிழி.
வாயுக் குமிழிக்குள் மட்டுமே பரபரப்பு.
விரிந்திருக்கும் வெறுமை விரவிக் கிடக்கும்
புரியாத காலவெளிக்குள் தனித்துக் கிடக்கின்றோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

பிரபஞ்சத்திள் தனிமையில் மூழ்கிக் கிடக்கின்றோம்.
போரும் ,பெருமையும் தேவை தானா?
சின்னக் குமிழிக்குள் என்ன கர்வம்?
சிதறி வெடிக்கின்றோம் தாய் மண்ணை.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

மண்ணை மட்டுமா பிரித்தோம் நாம்.
எண்ணத்தைப் பிரித்தோம். இம் மண்ணின்
குழந்தைகள் நாம் என்பதை மறந்தோம்.
குரோதம் மிகுந்து விரோதம் வளர்க்கின்றோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணில் ஒருதுளி நம்மண் அறிவோம்.
எண்ணத்தை விரிவு செய்து வாழ்வோம்.
கண்ணெதிரில் பிறக்கும் அன்புலகம் அறிவுலகம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.
மண்ணில் பிரிவினை வேண்டாம் அறிவோம்.
எண்ணத்தை விரிவு செய்தே இருப்போம்.

29. இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம் அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

ஒவ்வொரு கணமும் பிறக்கும் கலங்கள்
உள்ள உடம்பில் வாழ்கின்றோம் நாம்.
கணந்தோறும் பிறக்கின்றோம் நாம் அதனையும்
கூடவே எண்ணூவோம் .நடை பயில்வோம்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

இருக்கும் வரையில் இன்புற்று வாழ்ந்தான்.
இல்லாததை எண்ணி உள்ளதை என்றும்
இழந்தவன் அல்லன் அவன் என்பேன்.
இவன் வழியில் என்வழி தொடரும்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

No comments:

எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி சூதாட்டக் கடன்களைத் தீர்க்க எழுதிய நாவல் 'சூதாடி', எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறுவது போல் 'குற்றமும் தண்டனை'யும் அல்ல!

எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கி...

பிரபலமான பதிவுகள்