Saturday, October 12, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்!



இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம்  அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

ஒவ்வொரு கணமும் பிறக்கும் கலங்கள்
உள்ள உடம்பில் வாழ்கின்றோம் நாம்.
கணந்தோறும் பிறக்கின்றோம் நாம் அதனையும்
கூடவே எண்ணுவோம் .நடை பயில்வோம்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

இருக்கும் வரையில் இன்புற்று வாழ்ந்தான்.
இல்லாததை எண்ணி உள்ளதை என்றும்
இழந்தவன் அல்லன் அவன் என்பேன்.
இவன் வழியில் என்வழி தொடரும்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

No comments:

எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி சூதாட்டக் கடன்களைத் தீர்க்க எழுதிய நாவல் 'சூதாடி', எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறுவது போல் 'குற்றமும் தண்டனை'யும் அல்ல!

எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கி...

பிரபலமான பதிவுகள்