Sunday, October 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - சிந்திப்பீர் மானுடரே!


 இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

சிந்திப்பீர் மானுடரே!

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

கேட்பவற்றை அப்படியே நம்பாதே.
காண்பவற்றையும் அப்படியே நம்பாதே.
கேட்பவை, காண்பவை அனைத்தையுமே
கவனத்தில் எடுத்தே சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

மந்தையாக மாறிக் கிடக்காதே.
மனத்தில் இருத்தி சிந்திப்பாய்.
விந்தைமிகு இருப்பின் அர்த்தம்
விளங்கிக் கொள்ளச் சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

சிந்தனை என்பது நியூரோன்களின்
செயற்பாடு என்றுரைக்கும் அறிவியல்.
நியூரோன்களின் நாட்டியமே பிரபஞ்சம்
நினைவுகளின் விளையாட்டா பிரபஞ்சமும்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

No comments:

தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!

நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ...

பிரபலமான பதிவுகள்