Friday, February 28, 2025

அலெக்சாந்தர் புஷ்கினின் 'காப்டன் மகள்'


அலெக்சாந்தர் புஷ்கின் (அல்லது அலெக்சாந்தர் பூஷ்கின்) நவீன ருஷிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.  கவிதை, நாடகம், நாவலென இலக்கியத்தில் கால் பதித்தவர்.  இவரது புகழ்பெற்ற நாவலான 'காப்டன் மகள்'  இவரது கடைசி நாவல். இதனை ராதுகா பதிப்பகம், மாஸ்கோ நா.தரமராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பிலும் 'காப்டன் மகள்'என்னும் பெயரில் கவிதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இங்கு நான் பகிர்ந்து கொள்வது இணையக் காப்பகத்திலுள்ளது. நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியானது.

Wednesday, February 26, 2025

எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -


எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான  உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என் படைப்புகளின்  ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.

இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில் கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.

செயற்கை அறிவினை மானுடர் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

சிறுகதைகள்:

கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s

நாவல்கள்

அமெரிக்கா (America) -

https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan

குடிவரவாளன் (An Immigrant)

https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg    
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan

Tuesday, February 25, 2025

சிறுகதை: மான்ஹோல் - வ.ந.கிரிதரன்

 

கனடாவிலிருந்து வெளிவந்த 'தேடல்' சஞ்சிகையில் வெளியான எனது சிறுகதை 'மான்ஹோல்' . அச்சிறுகதையினை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன்.

மேற்படி  சிறுகதையைப்பற்றி Google NotebookLM இன் செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் உரையாடுகின்றார்கள். அவ்வுரையாடலே இங்குள்ள காணொளி.

எனது யு டியூப் சானலான V.N.Giritharan Podcast இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளியிது. 

சிறுகதையை வாசிக்க - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/manhole-v-n-giritharan-translation-by-latha-ramakrishnan/




 

Sunday, February 23, 2025

எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast'


நண்பர்களே! V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலை ஆரம்பித்துள்ளேன்.
இங்கு 'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் பதிவேற்றப்படும். 
 
இங்கு எனது எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்புகளை மையமாக வைத்து ,செயற்கை அறிவினால் உருவாக்கப்பட்ட இருவரின் உரையாடல்கள்  இடம் பெறும். 
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast
 


 

Friday, February 21, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'



உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.


அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.

இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.

Tuesday, February 18, 2025

அறிஞர் அண்ணாவின் உரை: இந்தி இணைப்பு மொழியாக இருக்க முடியுமா?


அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.
இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். 
 
இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். 

Monday, February 17, 2025

ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி.....

 - ஆய்வாளர் மன்னர் மன்னன் -


அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன்.  ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது.  Saattai  யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச்  சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப்  பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68

சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.

Saturday, February 15, 2025

பெரியார் என்னும் மகா மனிதர்!


பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..

அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்து வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.

சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கியது?

வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.

ஆதாரங்கள்!



அரசியல் ஆய்வாளர்  
அவர்.
அவரது கூற்றுக்கு
ஆதாரம் வேண்டும் என்றேன்.
அதற்கு
ஆதாரமா
பாரிஸ் தமிழச்சியின்
 யு டியூப்  வீடியோ
பார்க்கவில்லையா என்றார்.
பரிதாபமாக வேறு என்னைப்
பார்த்தார்.

உதவிப் பேராசிரியர் ஒருவர்.
ஆதாரம் கேட்டேன்.
இரண்டு யு டியூப் காணொளிகள்
இவையயே சான்றுகள் என்றார்.

இனி இவர்கள்
AI பெரியார்
AI  கலைஞர்
எல்லாரையும்
எடுத்து வருவார்கள்
ஆதாரங்களாக.

நாம் எங்கே போகின்றோம்?



Tuesday, February 11, 2025

ஏ தாழ்ந்த தமிழகமே!


அறிஞர் அண்ணா 1945இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தைத்திறந்து வைத்து ஆற்றிய உரை. இது 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா திறமையான பேச்சாளர். சிந்தனையாளர். ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடுகளாக, தர்க்கச் சிறப்பு மிக்கவையாக அவரது உரைகள் இருக்கும். 1947 தொடக்கம் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்கும் வரையிலான காலகட்டம் தமிழகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் மத்தியில் முக்கியமான காலகட்டம் .

சம்த்துவம், சுயமரியாதை, சம்நீதி, பகுத்தறிவு இவற்றை மையமாகக் கொண்டு திமுக இயங்கியது. கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்த வேறொரு கட்சி திமுக  போன்றேதும் உண்டா? தெரியவில்லை.

சினிமா, நாடகம், நாவல்ம் கட்டுரை என்று கலை, இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தம் கருத்துகளைப் பரப்பினார்கள்.  சினிமாவைப் பொறுத்த வரையில் திமுகவை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், உரைகளுக்கு பெரும்பங்குண்டு. எம்ஜிஆருக்கு முக்கிய பங்குண்டு. கலைஞரின் நாடகங்கள், பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.

வரலாறு அறிவோம்: விவேகியின் 'ஐக்கிய திராவிடம் ' நூல் வெளிப்படுத்தும் பெரியார் பற்றிய விபரங்கள்.

'

ஐக்கிய திராவிடம் - விவேகி - யூலை 1947இல் வெளியான நூல். இதிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்கள்  பெரியார் ஈ.வெ.ரா, திராவிடக் கழகம், பிரிவினையும் ஐக்கியமும் முக்கியமானவை. வாசித்துப் பாருங்கள். ஜூல 1, 1947 நாளைத் திராவிடப் பிரிவினை நாளாகப் பெரியாரின் கட்டளைப்படி கொண்டாடியதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.

பெரியார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையை வெறுத்தார்.  கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்கெதிராக நடந்த சத்தியாக்கிரகத்தில் மனைவி நாகம்மையுடன் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கின்றார்.

அப்பொழுது காங்கிரசில் இருந்த பெரியார், காங்கிரசில் நிலவிய ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக விலகி சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்துக் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது குடியரசு பத்திரிகையை ஆரம்பித்து மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டுகின்றார்.

எகிப்தும், கிரீஸ், துருக்கி,  ரஷ்யா, ஜேர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் , பிரெஞ்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றார்.  அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.

Monday, February 10, 2025

பெரியாரும் , தமிழ்த் தேசியமும், தமிழும் & திராவிடமும்


தமிழ்த் தேசியம் பற்றி 1938இலேயே பேசி விட்டார். அதற்காகப் போராடினார். இது  வரலாறு. பெரியார் தமிழர் தலைவர் என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 1938, 1939 காலகட்டத்தில் பெரியார் எழுதியவற்றை உள்ளடக்கியுள்ள இங்குள்ள பக்கங்களைப் பாருங்கள்.  இவற்றைப் படிக்காமல் திராவிடம் பற்றியும், தமிழ் பற்றியும் கூக்குரல் இடாதீர்கள்.  

https://www.facebook.com/VNGiritharan/posts/pfbid02iu78rotyGHuAtBxzk5sEXfY1t74r2GP1CN9sHHMJk8MvsdaYuSPDuozDCMxqyYSWl


 

 

 

 

Sunday, February 9, 2025

தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா?


மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்

பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.

குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?

குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.

நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?

Friday, February 7, 2025

வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'


பகுத்தறிவுக்  காவலன்  பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.

பகுத்தறிவுக்  காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

Thursday, February 6, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - எரியும் உலகின் தீயை அணைப்போம்.


இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI


பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம்  இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

Wednesday, February 5, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!


இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI


இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -


பதிவுகள் இணைய இதழில் வெளியான நந்திவர்மப் பல்லவனின் கட்டுரை.

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்!  - நந்திவர்மப் பல்லவன் -

தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத்  தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின்  ஆட்சிக் காலங்களில்  தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.

இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்  தன்னைக்  காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.

ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள்   தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.

2009இல் கலைஞரின் ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு வந்ததை வைத்து, கலைஞர் நினைத்திருந்தால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்  என்றொரு கதையையும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அது மிகவும் தவறான கூற்று. நிச்சயம் கலைஞர் தலைமையிலான திமுக அரசு அல்ல இந்திய அரசின் வெளி விவாகரக் கொள்கையினைத் தீர்மானிப்பது.  ஆளுநர்  மூலம் எந்தக் கணத்திலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கில்லை என்பதைக் காரணம் காட்டிக் கலைப்பதற்கு இந்திய மத்திய அரசால் முடியும். அந்நிலையில் இவ்விதமான கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஈழத்தமிழர்களுக்காக திமுக, அதிமுக ஒன்றிணைந்து ஆதரவு வெளிப்படுத்தினார்கள். தன் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார் கலைஞர். அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கின்றது அவரது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினால்.

2009இல் யுத்தத்தை முடித்ததில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு முக்கிய பங்குண்டு. மகிந்த ராஹ்பக்சவே கூறியிருக்கின்றார்  தான் இந்தியாவின் யுத்தத்தை நடத்தியதாக. உண்மையில் யுத்தம் அவ்விதம் முடிந்ததற்கு முக்கிய காரணம் ராஜிவ் காந்தி படுகொலை. அதன் எதிரொலிதான் யுத்தத்தின் அம்முடிவுக்குக் காரணம். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாகக்  கலைஞரின் மீது சேற்றை வாரி இறைத்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் அதற்குப் பாவிப்பது இலங்கைத்தமிழரை. இதற்கு இலங்கைத் தமிழ் அமைப்புகள் சிலவும், குறிப்பாகப் புகலிடத்தில் செயற்படும் அமைப்புகளும் பலியாகியுள்ளன என்பது துரதிருஷ்டமானது. இலங்கைத்தமிழர்கள் தம் நிலையைத் தமிழக அரசியல் கட்சிகள் தம் நலன்களுக்காகப் பாவிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசியல் கட்சிகளின், தமிழக மக்களின் ஒன்றிணைந்த ஆதரவைச் சீர்குலைக்கும் எவற்றுக்கும் ஆதரவளிக்கக் கூடாது.

எழுபதுகளில் வெளியான சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகள் நூலகம் இணையத்தளத்திலுள்ளன.  அவற்றை எடுத்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர்களின் உரிமைகளுக்கான திமுகவினரின் பங்களிப்பைத் தெளிவாகக் காணலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் து பெரியார் பூமி. அறிஞர் அண்ணா பூமி. கலைஞர் பூமி,. எம்ஜிஆர் பூமி.  இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களுக்கு ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.  அதுதான் ஈழந்த்தமிழர்களுக்குத்தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்.  

இந்நிலையில்  நாடு கடந்த தமீழீழ அரசின் சார்பில் வி,ருத்திரகுமாரன் பிரபாகரனையும், பெரியாரையும் இரு துருவங்களாக்கிக்கட்டமைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்யும் அரசியலை வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் பார்த்தேன். அது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர் அமைப்புகள் சீமான் தன் அரசியல் நல்னகளுகாக இலங்கைத் தமிழர்களைப் பாவிப்பதைக் கண்டிக்க வேண்டும்.  அனுமதிக்கக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்குத்தேவை தமிழகத்தமிழர்கள் அனைவரின் ஆதரவு மட்டுமே. அதற்கு ஊறு விளைவிக்கும் எதனையும் ஆதரிக்கக்கூடாது.

நன்றி : https://geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57/8959-2025-02-05-17-38-00

Tuesday, February 4, 2025

கவிதை பற்றிய உரையாடலொன்று...



கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.

கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.

அவரது கவிதை -

நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?

கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.

ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து  கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.

Saturday, February 1, 2025

நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -


[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.]

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்?  தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா?  அல்லது  அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா?  அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின்  கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.

நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம்  தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.  இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான்  இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்