'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, February 7, 2025
வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.வர்ணப் பிரிவுகள் வேண்டாம் என்றார்.
வாழ்க்கையில் சமத்துவம் வேண்டும் என்றார்.
தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்றால்
தன் மரியாதை, சமநீதி வேண்டும் என்றார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
மக்களுக்காய் வாழ்ந்த தலைவர் பெரியார்.
மாமனிதர் பெரியாரை இகழ்வார் சிறியார்.
பிரிவுகளைக் கடந்து நின்றவர் பெரியார்.
பிரித்துப் பார்ப்பவர் அவரை சிறியார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!
எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அள...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment