'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, February 7, 2025
வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.வர்ணப் பிரிவுகள் வேண்டாம் என்றார்.
வாழ்க்கையில் சமத்துவம் வேண்டும் என்றார்.
தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்றால்
தன் மரியாதை, சமநீதி வேண்டும் என்றார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
மக்களுக்காய் வாழ்ந்த தலைவர் பெரியார்.
மாமனிதர் பெரியாரை இகழ்வார் சிறியார்.
பிரிவுகளைக் கடந்து நின்றவர் பெரியார்.
பிரித்துப் பார்ப்பவர் அவரை சிறியார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'
"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment