'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, February 5, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!
இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமேதெரியும் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
எரி நட்சத்திரங்கள் கிளர்ச்சி தரும்.
தொலைவுகளில் எத்தனை எத்தனை உலகங்களோ?
மலைப்பைத் தரும் சிந்தனைகள் தொடரும்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
எத்தனை தரம் பார்த்தாலும் இன்பம்
அத்தனை தரமும் ஊற்றெடுத்துப் பெருகும்.
இரவு வானும் , சுடரும் , மதியும்
இருப்பின் நேர்த்தியை எடுத்தே உரைக்கும்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
இரவு வானை இரசித்துக் கொண்டே
இருப்பதில் நேரம் போவதும் தெரிவதில்லை.
விண்ணின் விந்தையைக் காட்டும் இரவுவான்.
தண் உணர்வு நெஞ்சை வருடும்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
இரவு வானின் இரசிகை நான்.
இரவு வானின் இரசிகை நான்.
Subscribe to:
Post Comments (Atom)
நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG] அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment