'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, February 9, 2025
தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா?
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?அதுதான் புதுமைப்பித்தன் சொன்னார்
மனிதராக மாறிய முதற் குரங்கும் தமிழர்
என்றால்தான் தமிழருக்குத் திருப்தி.
தமிழ் வெறியர் மலிந்து கிடக்கின்றார்.
தர்க்க நியாயம் அற்ற வெறியர் இவர்.
மானுடத் தொல்குடிகள்
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்.
அம்மானுடர் பேசிய மொழியென்ன?
காட்டுமிராண்டிகளின் மொழிதானே.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய குடியென்று உண்டா?
முட்டாள்களே! முட்டாள்களே !
ஆதிக்குடிகள் நிச்சயம் காட்டுமிராண்டிகள்தாம்.
மூடத்தனத்தை விட்டு வெளியே வாரீர்!
பகுத்தறிவைப் பாவிப்பீர்.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஆதி மானுடர்
தமிழரென்றால்,
அக்காட்டுமிராண்டிகள் பேசிய மொழியென்ன?
தமிழ்தானே!
மூடத்தனத்தில் மூழ்கிக்கிடப்பர் உணர்ச்சி வெறியர்.
அதனால்தான் மனம் வெந்து சொன்னார் பெரியார்
'தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி' என்று.
அது அவர்
உணர்ச்சி வெறியர்களைப் பார்த்துக் கூறியது.
மூடத்தனத்தில் மூழ்கிக்கிடப்போரை பார்த்துக் கூறியது.
பகுத்தறவுத் திறனற்றோரைப் பார்த்துக் கூறியது.
பெரியார் தான் தமிழரென்று பெருமைப்பட்டவர்.
தமிழே இடத்துக்கிடம்
வேறு வேறு பெயர்களில் பேசப்படுகின்றது
என்றவர்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையும் தமிழே
என்றவர்.
பெரியாரே கூறினார் கேள்வி கேள் என்று.
தான் கூறியதையும் கேள்விக்குட்படுத்து என்றார்.
அவரைப்
புரியார் புலம்புகின்றார் பெரியாரை இகழ்கின்றார்.
* பெரியாரின் எழுத்துகளைப் படிக்காமல் இங்கு வந்து உணர்ச்சி வெறி அடைவதற்குப் பதில் பின்வரும் இணைப்பில் அவரது எழுத்துகள் நிறைய உள்ளன. அவற்றை வாசித்து அவற்றைக் கேள்விக்குடுத்தும் வகையில் தர்க்கம் செய்யுங்கள். அத்தகைய எதிர்வினைகளே தற்போது அவசியம்.
https://archive.org/search?query=creator%3A%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AF%87.%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%22
Subscribe to:
Post Comments (Atom)
யு டியூப் ஆய்வாளர்கள்!
இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்க...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...
No comments:
Post a Comment