அண்மையில் கனடாவில் காலம் இதழின் ஆதரவில் நடைபெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டில் உரையாற்றியவர்களின் உரைகளை உள்ளடக்கிய முழுமையான காணொளி ஊடகவியலாளர் கிருபா கந்தையாவின் 'தடயத்தார்' யு டியூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் கிருபா கந்தையா அவர்களுக்குப் பாராட்டும் , நன்றியும்.
இங்கு உரையாற்றியவர்களில் நானும் ஒருவன். அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் அறிவியல் நூலான 'ஒளியிலிருந்து இருளுக்கு' என்னும் நூல் பற்றிய எனது உரையினையும் இக்காணொளி முழுமையாக உள்ளடக்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இக்காணொளியைப் பாருங்கள். அனைவர்தம் உரைகளையும் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளிக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=cdGp-qqsQ5s


No comments:
Post a Comment