தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவரைப்பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் ஒரு சிறு குறிப்பினை இட்டுள்ளேன். அதன எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
Saturday, January 20, 2024
நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...
தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவரைப்பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் ஒரு சிறு குறிப்பினை இட்டுள்ளேன். அதன எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
Tuesday, January 16, 2024
'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்!
இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத் தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Monday, January 15, 2024
வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள் குறித்த ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன் அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.
Friday, January 12, 2024
எனது ஆங்கிலக் கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு!
எனது ஆங்கில வலைப்பதிவில் எழுதிய கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு இவை.
Poem: Kannamma! We Are the Elements of a Four-Dimensional painting! (Kannamma Poem 1)
Expanding in a large space,
Who drew this four-dimensional painting here,
dear Kannamma?
Do you think there are
more multi-dimensional paintings,
beyond four that exist parallel Kannamma?
If they do, do you believe or
Do you think
There is a way to reach them
Kannamma?
Please tell me,
my dear Kannamma!
Wednesday, January 10, 2024
காலத்தால் அழியாத கானம் - 'நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?'
காலத்தால் அழியாத கானமான 'நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?' பற்றி ஒரு சிறு குறிப்பினை எனது ஆங்கில வலைப்பதிவுப் பக்கத்தில் எழுதினேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
யாழ் மனோஹரா திரையரங்கு பற்றிய நினைவுகள்!
ஓவியர் மணியத்தின் புகழ்பெற்ற சினிமாக் 'கட் அவுட்'டுகள்!
கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -
இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...





