எனது 52 கட்டுரைகள் அடங்கிய இரண்டாவது தொகுதி தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே எனது கட்டுரைகளின் முதற் தொகுதி வ.ந.கிரிதரன் கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக 2022இல் வெளிவந்துள்ளது. https://www.amazon.com/dp/B0DK7RDQFR
Wednesday, October 30, 2024
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் - தொகுப்பு 2
எனது 52 கட்டுரைகள் அடங்கிய இரண்டாவது தொகுதி தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே எனது கட்டுரைகளின் முதற் தொகுதி வ.ந.கிரிதரன் கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக 2022இல் வெளிவந்துள்ளது. https://www.amazon.com/dp/B0DK7RDQFR
வ.ந.கிரிதரனின் பாடல்கள் - தொகுப்பு 2
எனது யு டியூப் சானலான 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் வெளியான பாடல்களின் இரண்டாவது தொகுதி 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்னும் தலைப்பில் , பதிவுகள்.காம் வெளியீடாக அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது - https://www.amazon.com/dp/B0DJYKTPNS
வ.ந.கிரிதரனின் 'நவீனக் கட்டடக்கலைச் சிந்தனைகள்'
நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function), ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture), கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe) ''குறைவில் நிறைய (Less is more) ' போன்ற கோட்பாடுகளையும் மற்றும் லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
Thursday, October 24, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - காதலை அறிய வைத்தாய் கண்ணா!
இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
காதலை அறிய வைத்தாய் கண்ணா
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
காதல் பிரதிபலன் எதிர்பார்ப்பது இல்லை.
காதல் சுயநலம் மிகுந்தது அல்ல.
உண்மைக் காதலைப் பற்றிக் கூறினேன்.
உணர்ச்சிக் காதல் பற்றி அல்ல.
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
அறிமுகம்
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.
Thursday, October 17, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: அன்பின் வலிமை!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
அன்பின் வலிமை!
மனtதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.
அன்பே! எண்ணங்களின் வலிமையை அறிந்தேன்
அன்பின் வலிமையினை உணர்ந்தேன் உன்மூலம்.
தொலைவில் இருந்தாய். நினைவில் வந்தாய்.
மலைக்க வைத்தாய். மனதொன்றி நினைத்தாய்.
மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.
Tuesday, October 15, 2024
எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி சூதாட்டக் கடன்களைத் தீர்க்க எழுதிய நாவல் 'சூதாடி', எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறுவது போல் 'குற்றமும் தண்டனை'யும் அல்ல!
எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சு.ரா.வின் 'அந்தரத்தில் பறக்கும் கொடி' என்னும் தொகுப்பிலுள்ளது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் ஒருவர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்லி. அவரைப் பற்றி கட்டுரைகள் எவை கண்ணில் தட்டுப்பட்டாலும் வாசிக்கத் தவறுவதில்லை. இந்தக் கட்டுரையை முன்பொரு தடவை வாசித்ததாகவும் நினைவு. இம்முறை ஆழ்ந்து வாசித்தேன். இவ்விதம் வாசிக்கையில் சு.ரா அவர்களின் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:
"....கடன்காரர்கள் அவன் கழுத்தில் சுருக்கைப் போட்டு இழுக்கின்றார்கள். துன்பத்திலும், வறுமையிலும் ,தனிமையிலும் உழல்கிறான். அப்போது அவன் எழுதத்தொடங்கிய நாவல்தான் 'குற்றமும் தண்டனையும்'
இதனை வாசித்தபோது சு.ரா எவ்விதம் இவ்விதமானதொரு வரலாற்றுத் தவறினை விட்டிருக்க முடியும் என்னும் சிந்தனை ஓடிற்று. காலச்சுவடு பதிப்பகம் மிகவும் அவதானமாகப் பிழை, திருத்தம் செய்பவர்கள் என்ற கருத்தொன்றும் நிலவுகின்றது. இது முக்கியமான வரலாற்றுத் தவறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

