Monday, March 23, 2026
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
Saturday, March 21, 2026
மகாகவி பாரதியார் பாடல் - கண்ணன் என் காதலன்! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
Friday, March 20, 2026
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது.
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது.
படிப்பு வளருது;பாவம் தொலையுது.
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்.
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
Thursday, March 19, 2026
மகாகவி பாரதியார் பாடல் - திக்குக்கள் எட்டும் சிதறி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று.
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
Wednesday, March 18, 2026
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
Tuesday, March 17, 2026
எழுத்தாளர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை.
கவிஞர் வைரமுத்துவின் தனிப்பட்ட ஆளுமை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டது. குறிப்பாகக் கலையுலகச் சார்ந்த பெண்கள் அவர் மேல் வைத்துள்ள குற்றச்சாட்டுகள். அவற்றை தேர்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்திருந்தால் கவிஞருக்கு விருது கிடைத்திருக்காது.
எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.
மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்
மகாகவி பாரதியாரின் 'பாரத சமுதாயம்' கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளைக்கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பா...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
