Wednesday, March 18, 2026

மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

      


இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை                                                          
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்                                            
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்                                               
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து                                                         
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்                                
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா                                                          
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ? என்றேன்.                     
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்                            
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்                           
இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம் என்றாள்                              
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?                            
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ ? என்றேன்.                  
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்             
விருப்புடனே பெய்குவது வேறாமோ? என்றாள். 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்                                                          
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்                                                       
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்                                                            
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்                                                   
ஏலத்திலே விடுவதுண்டோ எண்ணத்தை? என்றேன்                    
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண், என்றாள்                   
மூலத்தைச் சொல்லவோ. வேண்டாமோ? என்றேன்,
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.                   

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   

No comments:

மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி

மகாகவி பாரதியார்  பாடல் - புதிய கோணங்கி இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்  குடுகுடு குடுகுடு கு...